May Lord Annapurni Chellapillayar shower His blessing to One and All.


www.kalyaanam.co.in OM Navagraha Devadaabyoya Nama:


பிறந்த நட்சத்திரங்களில் பலன்


1) அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவன் எந்த காரியத்தையும் செம்மையாகச் செய்து முடிப்பான்
2) பரணி நட்சத்திரத்தில் பிறந்தவன் தன் பெற்றொருக்கு நல்ல பிள்ளையாக நடப்பான்
3) கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவன் சாதுர்யமான பேச்சுத்திறமையைப் பெற்று இருப்பான்,
4) ரோகிணி, நட்சத்திரத்தில் பிறந்தவன் பிறருக்கு உதவி செய்வதில் விருப்பம் உடையவனாய் இருப்பான்,
5) மிருகசீர்ஷம், நட்சத்திரத்தில் பிறந்தவன் எப்போதும் சுறுசுறுப்பு உடையவனாய் இருப்பான்
6) திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவன் எதிலும் கண்ணியம் வாய்ந்தவனாய் இருப்பான் 
7) புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவன்வக்கீல்களைப் போல வல்லவனாய் இருப்பான், 
8) பூசம், நட்சத்திரத்தில் பிறந்தவன் பகைவருக்குப் பயப்படமாட்டான், 
9) ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவன் பகைவருக்கு பகையாய் இருப்பான்,
10) மகா நட்சத்திரத்தில் பிறந்தவன் சுற்றுப்பயணங்களிள் பிரியம் உள்ளவனாய் இருப்பான்.
11) பூரம். நட்சத்திரத்தில் பிறந்தவன் கல்வியில் ஆர்வம் உடையவனாய் இருப்பான்.
12) உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவன் பெண்களிடம் விருப்பம் உள்ளவனாய் இருப்பான்.
13) ஹஸ்தம், நட்சத்திரத்தில் பிறந்தவன் குரு வினிடத்தில் பக்திஉள்ளவனாய் இருப்பான்.
14) சித்திரை.நட்சத்திரத்தில் பிறந்தவன் சிறிது முன் கோபக்காரனாய் உள்ளவனாய் இருப்பான்.
15) சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவன் உணவில் பிரியம் உள்ளவனாய் இருப்பான்.
16) விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவன் நல்ல நீதிமானாக விளங்குவான் உள்ளவனாய் இருப்பான்.
17) அனுஷம், நட்சத்திரத்தில் பிறந்தவன் புகழைத் தேடிக் கொள்ள ஆசைப்படுவான்
18) கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவன் பக்திமானாக விளங்குவான்
19) மூலம், நட்சத்திரத்தில் பிறந்தவன் ஆன்மீகத் துறையில் முன்னேற்றம் உள்ளவனாய் இருப்பான்.
20) பூராடம், நட்சத்திரத்தில் பிறந்தவன் தன்னை அடுத்தவரைக்காப்பாற்றுவதில் ஆர்வம் உள்ளவனாய் இருப்பான்.
21) உத்திராடம், நட்சத்திரத்தில் பிறந்தவன்தன் சுற்றத்தார் நலனில் அக்கறை கொண்டவனாய் இருப்பான்
22) திருவோணம், நட்சத்திரத்தில் பிறந்தவன் எப்போதும் உற்சாகம் உடையவனாய் இருப்பான்.
23) அவிட்டம், நட்சத்திரத்தில் பிறந்தவன் தியாகக் குணம் படைத்தவனாய் இருப்பான்
24) சதயம், நட்சத்திரத்தில் பிறந்தவன் பொய் பேச விரும்பமாட்டான்.
25) பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவன் பிறர் சொல்பொறுக்காதவனாய் இருப்பான்.
26) உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவன் நல்லவர்களுக்கு நல்லவனாகவும்.பொல்லாதவர்களுக்குப் பொல்லாதவனாகவும் விளங்குவான்.
27) ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவன் பிறர் பேச்சைக் கேட்பவனாக இருப்பான்.
28) அபிஷித்து நட்சத்திரத்தில் பிறந்தவன் சேன்மம் தெரியாது இருப்பான்.

(பிறந்த கரணங்களில் பலன்)

1) பவ கரணத்தில் பிறந்தவன்.அச்சம் இல்லாதவனாய் இருப்பான் 
2) பாலவ கரணத்தில் பிறந்தவன், பல நற்குணங்களை உடையவனாய் இருப்பான். 
3) கௌலவ கரணத்தில் பிறந்தவன், நல்ல ஓழுக்கங்களை உடையவனாய் இருப்பான் 
4) தைதுலை கரணத்தில் பிறந்தவன்,உத்தியோகத்தில் ஆர்வம் உள்ளவனாய் இருப்பான் 
5) கரசைக் கரணத்தில் பிறந்தவன்,பிற மாதரிடம் பிரியம் உள்ளவனாய் இருப்பான்
6) வணிசைக் கரணத்தில் பிறந்தவன்.இனிக்கப் பேசும் இயல்பு உடையவனாய் இருப்பான்
7) பத்திரைக் கரணத்தில் பிறந்தவன், எதிலும் விரைவில் சலிப்பு அடைபவனாய் இருப்பான்,
8) சகுனிக் கரணத்தில் பிறந்தவன், நல்ல அறிவாளியாக விளங்குவான்,
9) சதுஷ்பாத கரணத்தில் பிறந்தவன்.தத்துவ நூல்களில் விருப்பம் உடையவனாய் இருப்பான்.
10) நாகவ கரணத்தில் பிறந்தவன், மிக்க மானம் உள்ளவனாய் இருப்பான்

கிழமைகளில் பிறந்தவர் பலன்

1) ஞாயிற்றுக்கிழமையில் பிறந்தவன்.செல்வம் உடையவனாய் இருப்பான்
2) திங்கள்கிழமையில் பிறந்தவன்,புகழ் உடையவனாய் இருப்பான்
3) செவ்வாய்க்கிழமையில் பிறந்தவன். தந்திரக்காரனாய் இருப்பான்
4) புதன் கிழமை பிறந்தவன், கல்வி உடையவனாய் இருப்பான்.
5) வியாழக்கிழமை பிறந்தவன்,அறநெறியில் விருப்பம் உடையவனாய் இருப்பான்
6) வெள்ளிக்கிழமை பிறந்தவன், உயர்ந்த காரியங்களைச் செய்பவனாய் இருப்பான்
7) சனிக்கிழமை பிறந்தவன், பிறரை ஏமாற்றுவதில் திறமைசாலியாக இருப்பான்

பிறந்த யோகங்களில் பலன்

விஷ்கம்ப யோகத்தில் பிறந்தவன், உறவினர்களிடம் அன்பு உள்ளவனாய் இருப்பான்
பிரீதி யோகத்தில் பிறந்தவன், துணிவு உடையவனாய் இருப்பான்,
ஆயுஷ்மான் யோகத்தில் பிறந்தவன், ஓழுக்கம் உடையவனாய் இருப்பான்
சௌபாக்கிய யோகத்தில் பிறந்தவன், தெய்வபக்தி உடையவனாய் இருப்பான்.
சோபன யோகத்தில் பிறந்தவன்,மானம் உள்ளவனாய் இருப்பான்.
அதிகண்ட யோகத்தில் பிறந்தவன்,புகழ் உடையவனாய் இருப்பான்.
சுகர்ம யோகத்தில் பிறந்தவன், புண்ணியங்களைச் செய்வதில் விருப்பம் உடையவனாய் இரு
திருதி யோகத்தில் பிறந்தவன், இனிய சொற்களைப் பேசுபவனாய் இருப்பான்.
சூல யோகத்தில் பிறந்தவன், கருணை உடையவனாய் இருப்பான்.
கண்ட யோகத்தில் பிறந்தவன், கர்வம் உடையவனாய் இருப்பான்.
விருத்தி யோகத்தில் பிறந்தவன், செல்வந்தர்களிடத்தில் நட்பு உடையவனாய் இருப்பான்.
துருவ யோகத்தில் பிறந்தவன், பெரியோரிடம் பக்தி உடையவனாய் இருப்பான்.

வியாகாத யோகத்தில் பிறந்தவன், அடிக்கடி வெளியூர் செல்வதில் விருப்பம் உடையவனாய் இருப்பான்.
ஹர்ஷண யோகத்தில் பிறந்தவன்,அறிவாளியாக இருப்பான்.
வஜ்ரயோகத்தில் பிறந்தவன், வேளாண்மையில் விருப்பம் உடையவனாய் இருப்பான்.
சித்தியோகத்தில் பிறந்தவன், எல்லாருக்கும் நல்லவனாக விளங்குவான்.
வரீயான் யோகத்தில் பிறந்தவன்,பகைவரை ஒடுக்குவதிலேயே ஆர்வம் உள்ளவனாய் இருப்பான்.
வாரீயன் யோகத்தில் பிறந்தவன்,உண்மையை மறைப்பதில் திறமை உள்ளவனாய் இருப்பான்.
பரிக யோகத்தில் பிறந்தவன், பிறரை ஏமாற்றுவதில் கெட்டிக்காரனாய் இருப்பான்
சிவயோகத்தில் பிறந்தவன், பெற்றோர்களைப் பேணுவதில் பிரியம் உள்ளவனாய் இருப்பான்.
சித்தி யோகத்தில் பிறந்தவர், செல்வ செல்வாக்கு உள்ளவர்
சாத்திய யோகத்தில் பிறந்தவர், கலைகளில் வல்லுநனாய் இருப்பான்.
சுபயோகத்தில் பிறந்தவன், பெண்களிடம் பிரியம் உள்ளவனாய் இருப்பான்.
சுப்ரயோகத்தில் பிறந்தவன், முன்கோபக்காரனாய் இருப்பான்
பிராம்ய யோகத்தில் பிறந்தவன், பிறருக்கு உதவுவதிலேயே நாட்டம் உடையவனாய் இருப்பான்.

பிறந்த திதிகளில் பலன்

பிரதமையில் பிறந்தவன்,எதையும் ஆழமாகச் சிந்தித்துப் பார்ப்பான்.
துவிதியையில் பிறந்தவன், பொய் பேச வெட்கப்படுவான்.
திருதியையில் பிறந்தவன், நினைத்த காரியத்தை முடிப்பான்.
சதுர்த்தியில் பிறந்தவன், மந்திர சித்தியில் விருப்பம் உடையவனாய் இருப்பான்.
பஞ்சமியில் பிறந்தவன், பெண்களிடத்தில் ஆசை உடையவனாய் இருப்பான்.
சஷ்டியில் பிறந்தவன், செல்வர்களால் விரும்பப்படுவான்.
சப்தமியில் பிறந்தவன், இரக்கம் உடையவனாய் இருப்பான்.
அஷ்டமியில் பிறந்தவன்,குழந்தைகளிடத்தில் பிரியம் உள்ளவனாய் இருப்பான்.
நவமியில் பிறந்தவன்,புகழில் நாட்டம் உடையவனாய் இருப்பான்.
தசமியில் பிறந்தவன், ஒழுக்கம் மிக்கவனாய் இருப்பான்.
ஏகாதசியில் பிறந்தவன், பொருள் ஈட்டுவதில் நாட்டம்
உள்ளவனாய் இருப்பான்.
துவாதசியில் பிறந்தவன்,புதுமையான தொழில்களில் ஈடுபடுவான்.
திரயோதசியில் பிறந்தவன்,உறவினர்களோடு ஓட்டி வாழமாட்டான்.
சதுர்த்தசியில் பிறந்தவன்,பிறர் செய்த சிறு தவறுகளையும் மன்னிக்கமாட்டான்
பௌர்ணமியில் பிறந்தவன்,மிகவும் தெளிவான சிந்தனா சத்தி உடையவனாய் இருப்பான்.
அமாவாசையில் பிறந்தவன், தன் அறிவையும், ஆற்றலையும் மேலும் பெருக்கிக்கொள்வதிலேயே ஆர்வம் உடையவனாய் இருப்பான்.

(சூரியனின் பலன்களின் கோசாரம்)
-----------------------------------------------------------------------------------------------------------------
1)ஒரு ஜாதகனின் சந்திர லக்கினத்தில் சூரியன் சஞ்சரிக்கும் போது:
அவனது செல்வங்கள் விரயம் ஆகின்றன, அல்லது அவனுக்கு கௌரவக் குறைவு ஏற்படுகிறது .அத்துடன் அவனுக்கு வயிற்றுவலியாவது மார்பு வலியாவது ஏற்படக்கூடும். அவன் வெளியில் அலைந்து திரியும் படியும் நேரலாம்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
2)
சந்திர லக்கினத்துக்கு இரண்டாம் இடத்தில் சூரியன் சஞ்சரிக்கும் போது; 
ஜாதகனுக்குப் பொருள் நஷ்டம் ஏற்படும்.அவன் வஞ்சகர்களால் ஏமாற்றப்படுவான்.அவனுக்குக் கண்நோய் உண்டாகும்.பொதுவாக.
ஜாதகனுக்குச் சுகம் இராது.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
3)
சந்திரன் லக்கினத்துக்கு மூன்றாம் இடத்தில் சூரியன் சஞ்சரிக்கும் போது; 
ஜாதகனுக்கு ஒரு பிதிய பதவி கிடைக்கும்.செல்வம்.
மகிழ்ச்சி. ஆரோக்கியம் ஆகியவை ஏற்படும்.அவனுடைய
பகைவர்கள் கேடு அடைவார்கள்,
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------
4)
சந்திர லக்கினத்துக்கு நான்காம் இடத்தில் சூரியன் சஞ்சரிக்கும்போது; 
ஜாதகன் நோயுறுவான். அவனுடைய இன்ப அனுபவங்களுக்குத் தடை ஏற்படும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
5)
சந்திர லக்கினத்துக்கு ஐந்தாம் இடத்தில் சூரியன் சஞ்சரிக்கும் போது: 
ஜாதகனுக்கு நோய்களாலும் பகைவர்களாலும் துன்பங்கள் ஏற்படும். ஆனால் சூரியன் சஞ்சரிக்கும் நட்சத்திரம் சுபமானதாரையாய் இருந்தால் துன்பங்கள் வருவதுபோல் தோன்றுமேயொழிய வரமாட்டா,,
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
6)
சந்திர லக்கினத்துக்கு ஆறாம் இடத்தில் சூரியன் சஞ்சரிக்கும்போது; 
ஜாதகனுடைய நோய்கள் விலகும். கவலைகள் நீங்கும். பகைவர்கள்
ஒழிவார்கள்
----------------------------------------------------------------------------------------------------------------------------------
7)
சந்திரன் லக்கினத்துக்கு ஏழாம் இடத்தில் சூரியன் சஞ்சரிக்கும்போது; 
ஜாதகனுக்கு அலைச்சல் ஏற்படும்.வயிற்று நோய்னால் பயம் ஏற்படும்.அவன் தாழ்நிலையை அடைகிறான்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
8)
சந்திரன் லக்கினத்துக்கு எட்டாம் இடத்தில் சூரியன் சஞ்சரிக்கும்போது. 
ஜாதகனுக்கு நோய் உண்டாகும்.வீண் பயங்களும்.மனைவியுடன் சச்சரவுகளும் ஏற்படும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
9)
சந்திர லக்கினத்துக்கு ஒன்பதாம் இடத்தில் சூரியன் சஞ்சரிக்கும்போது: 
ஜாதகனுக்கு எதிலும் நிம்மதி இராது.அவனுக்குக் கௌரவம் குன்றும்.நோய் உண்டாகும்.பணத்தினால் பகைமை ஏற்படும்,
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
10)
சந்திரனுக்குப் பத்தாம் இடத்தில் சூரியன் சஞ்சரிக்கும் போது; 
ஜாதகன் தன் பகைவர்கள் அஞ்சும்படியான வெற்றிகளை அடைவான்.அவன் எடுத்த முயற்சிகள் யாவும் கைகூடும்
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
11)
சந்திரனுக்கு பதினோராம் இடத்தில் சூரியன் சஞ்சரிக்கும்போது; 
ஜாதகன் தன் வெற்றாயால் தீட்டிய புதிய பதவியை அடைவான். அவனது மதிப்பு உயரும்.செல்வம் பெருகும். நோய் நீங்கும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
12)
சந்திரனுக்குப் ப்ன்னிரண்டாம் இடத்தில் சூரியன் சஞ்சரிக்கும்போது; 
ஜாதகனுடைய நல்ல முயற்சிகளில் பல் வெற்றி அடைகின்றன, தீய முயற்சிகள் தோல்வி அடைகின்றன.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பொதுவா.நல்ல உள்ளமும் நல்ல ஓழுக்கமும் உடைய ஜாதகர்களுக்கு.கோசார ரீதியாகவோ தசாபுத்தி ரீதியாகவோ எவ்வளவு கோளாறான கிரகமும் அவ்வளவாகத் தீங்கு செய்துவிட மாட்டாது
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அதேபோல. தீய உள்ளமும் தீய ஒழுக்கங்களும் உடைய ஜாதகர்களுக்கு. கோசார ரீதியாகவோ தசாபுத்தி ரீதியாகவோ எவ்வளவு சுபமான கிரகமும் அவ்வளவாக நன்மை செய்ய மாட்டாது. அப்படியே நன்மை செய்தாலும், அந்த நன்மையில் ஏதேனும் ஒரு தீமை ஒளிந்து கொண்டு இருக்கும்
-----------------------------------------------------------------------------------------------------
(சேர்க்கை கிரகங்கள்)
-------------------------------------------------------------------------------------
1)சூரியனும் வளர்பிறைச் சந்திரனும் கூடி நின்றால்;
ஜாதகன் புகழ்படைத்தவனாய் விளங்குவான்.காரியத்தில் கெட்டிக்காரனாய். ஆனால் பெண்களுக்கு வசப்பட்டவனாய் இருப்பான்
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------
2)
சூரியனும் செவ்வாயும் கூடி நின்றால்: 
ஜாதகன் அதட்டிப் பேசுவான். கபடனாகவும் இருப்பான்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
3)
சூரியனும் புதனும் கூடி நின்றால்;
ஜாதகன், கல்விமானாகவும் அழகு உடையவனாகவும் இருப்பான். அவனிடம் நுண்ணறிவும் உடல் வலிமையும் காணப்படும். 
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
4)
சூரியனும் குருவும் கூடி நின்றால்: 
ஜாதகன் செல்வம் உடையவனாகவும்:செல்வர்களுடன் தொடர்பு கொண்டவனாகவம்;அரசாங்கத்தில் செல்வாக்கு உள்ளவனாகவும்;தூய்மையான உள்ளமும் தூய்மையான பழக்கவழக்கங்களும் உடையவனாகவும் விளங்குவான்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
5)
சூரியனும் சுக்கிரனும் கூடி நின்றால்: 
ஜாதகன் தன் மனைவிக்குப் பிரியமானவனாய் இருப்பான்.அவனுக்குப் பகைவர்களும் இருப்பார்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
6)
சூரியனும் சனியும் கூடி நின்றால்: 
ஜாதகன் எதிலும் கெட்ட பெயர் எடுப்பான்.மந்த புத்தி உடையவனாகவும்
பகைவர்களுக்கு வசப்பட்டவனாகவும் இருப்பான்
------------------------------------------------------------------------------
7)
சூரியனும் சந்திரன் செவ்வாய் இம்மூவரும் கூடி நின்றால்: 
ஜாதகன் புகழ் படைத்தவனாய் இருப்பான்.ஆனால் வீண் பேச்சுக்கள் பேசுவான்.
------------------------------------------------------------------------------
8)
சூரியன் சந்திரன் புதன் இம்மூவரும் கூடி நின்றால்: 
ஜாதகன் மன்னர்களால் மதிக்கப்படுவான்.
-------------------------------------------------------------------------------
9)
சூரியன் சந்திரன் குரு இம்மூவரும் கூடி நின்றால்; 
ஜாதகன் மிகவும் சான்றோன் என்று பெயர் எடுப்பான் செல்வர்கள் எல்லாம் 
அவனோடு நட்புக் கொள்ள ஆசைப்படுவார்கள்.
-------------------------------------------------------------------------------
10)
சூரியன் சந்திரன் சுக்கிரன் இம்மூவரும் கூடி நின்றால்: 
ஜாதகன் பணக்காரனாய் இருப்பான். அவனுக்குப் பகைவர்களும் இருப்பார்கள். அவன் பாவச் செயல்களில் துணிந்து ஈடுபடுவான்.
-------------------------------------------------------------------------------
11)
சூரியன் சந்திரன் சனி இம்மூவரும் கூடி நின்றால்: 
ஜாதகன் குணக்கேடனாய். இருப்பான்,ஊர் ஊராய் அலைந்து திரிவான்.
-------------------------------------------------------------------------------
12) 
சூரியன் செவ்வாய் புதன் இம்மூவரும் கூடி நின்றால்: 
ஜாதகன் பணக்காரனாய் இருப்பான் மக்கட்பேற்றை உடையவனாகவும் இருப்பான்
-------------------------------------------------------------------------------
13)
சூரியன் செவ்வாய் குரு இம்மூவரும் கூடி நின்றால்: 
ஜாதகன் மிக இனிமையாகப் பேசுவான். ஓர் அமைச்சனாகவோ தளபதியாகவோ பதவி பெறுவான்.
-------------------------------------------------------------------------------
14) 
சூரியன் செவ்வாய் சுக்கிரன் இம்மூவரும் கூடி நின்றால்: 
ஜாதகன் கண்நோய் உடையவன், ஆனால் பிறந்தவனாகவும்.செல்வங்கள் மிகுந்தவனாகவும் இன்பங்களை அனுபவிப்பவனாகவும் விளங்குவான்
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
15) 
ஜாதகனுக்குச் செல்வம் இருக்கும்.ஆனால் நோய்களும் 
இருக்கும்.அவன் தன் உறவினர்களைப் பிரிந்து வாழ்வான். சிறிது முரட்டுத்தனம் உடையவனாகவும் இருப்பான்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
16)
சூரியன் புதன் குரு இம்மூவரும் கூடி நின்றால்; 
ஜாதகன். புகழும் பொருளும் நிலையான வாழ்வும் உடையவனாய் விளங்குவான்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
17) 
சூரியன் புதன் சுக்கிரன் இம்மூவரும் கூடி நின்றால்: 
ஜாதகன் நல்ல கல்விமானாகவும் ஆணழகனாகவும் காட்சி அளிப்பான்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
18)
சூரியன் புதன் சனி இம்மூவரும் கூடி நின்றால்: 
ஜாதகன் தீக்குணங்களும் தீய ஒழுக்கங்களும் உடையவனாய் இருப்பான். வறுமையால் வாடுவான்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
19) 
சூரியன் குரு சுக்கிரன் இம்மூவரும் கூடி நின்றால்: 
ஜாதகன் செல்வந்தன்கவும். பிறர் உள்ளத்தைக கவர்பவனாகவும் இருப்பான். அவனுக்குச் சிறந்த அறிவுத் திறன் இருக்கும். ஆனால் கண்நோயால் வருந்துவான்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
20) 
சூரியன் குரு சனி இம்மூவரும் கூடி நின்றால்: 
ஜாதகன் பெரிய பதவியில் உள்ளவர்களுடன் நெருக்கமான தொடர்பு கொண்டு இருப்பான். மிகுந்த மன வலிமை படைத்தவனாக விளங்குவான்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
(கோசார சந்திரனின் பலன்கள்)
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
1)
ஒரு ஜாதகனின் சந்திர லக்கினத்தில் சந்திரன் சஞ்சரிக்கும்போது; 
ஜாதகனுக்கு நல்ல உணவு கிடைக்கும். அவனுக்குச் சமமான படுக்கை உண்டாகும் புத்தாடைகள் கிடைக்கும்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
2) 
சந்திரன் லக்கினத்துக்கு இரண்டாம் இடத்தில் சந்திரன் சஞ்சரிக்கும்போது; 
ஜாதகனுக்குப் பொருள் விரயம் அல்லது மதிப்பு குறைவு ஏற்படும்.அவன் எதுத்த காரியங்கள் தடைப்படும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
3) 
சந்திர லக்கினத்துக்கு மூன்றாம் இடத்தில் சந்திரன் சஞ்சரிக்கும்போது; 
ஜாதகனுக்குப் பண வசதி உண்டாகும்.புதிய ஆடைகள் கிடைக்கும் அவனுடைய முயற்சிகளில் வெற்றிகிட்டும். அவனுக்கு இன்ப அனுபங்கள் ஏற்படும்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
4) 
சந்திர லக்கினத்துக்கு நான்காம் இடத்தில் சந்திரன் சஞ்சரிக்கும்போது; 
ஜாதகனுக்கு எதிலும் துணிவு ஏற்படமாட்டாது. அவன் யாரையும் நம்பமுடியாமல் 
தவிப்பான்;
-------------------------------------------------------------------------------
5) 
சந்திர லக்கினத்துக்கு ஐந்தாம் இடத்தில் சந்திரன் சஞ்சரிக்கும்போது: 
ஜாதகனுக்குத் தாழ்வு நிலை ஏற்படும் அவனுக்கு நோயும் கவலையும் உண்டாகும். அவன் போக விரும்பும் இடங்களுக்குப் போக முடியாமல் இடையூறு ஏற்படும்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
6) 
சந்திர லக்கினத்துக்கு ஆறாம் இடத்தில் சந்திரன் சஞ்சரிக்கும்போது: 
ஜாதகக்குப் பணவருவாய் ஏற்படும்.சுகவாழ்வு உண்டாகும். நோய்கள் மறையும். பகைவர்களும் விலகிச் செல்வார்கள்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
7) 
சந்திர லக்கினத்துக்கு ஏழாம் இடத்தில் சந்திரன் சஞ்சரிக்கும்போது;
ஜாதகனுக்கு. வாகன வசதிகள் பெருகும். கௌரவம் உண்டாகும்.நல்ல உணவுகள் கிடைக்கும்.பண வரவு ஏற்படும். 
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
8) 
சந்திர லக்கினத்துக்கு எட்டாம் இடத்தில் சந்திரன் சஞ்சரிக்கும்போது;
ஜாதகனுக்கு திடீர் என்று எதிர்பாராத அச்சம் ஏற்படும். பசிக்கு உணவு தானாகவே கிடைக்கும்.நோய்கள் உண்டாகும். 
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
9) 
சந்திர லக்கினத்துக்கு ஒன்பதாம் இடத்தில் சந்திரன் சஞ்சரிக்கும்போது;
ஜாதகனுக்கு ஏதாவது ஒரு வகையில் கட்டுப்பாடு உண்டாகும். மனத்திற்கு அச்சம் தோன்றும். உடல் உழைப்பை ஏற்படுத்தும்.வயிற்று வலியும் ஏற்படலாம். 
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
10) 
சந்திர லக்கினத்துக்குப் பத்தாம் இடத்தில் சந்திரன் சஞ்சரிக்கும்போது;
ஜாதகனுக்கு மற்றவர்கள் கீழ்ப்படிந்து நடப்பார்கள். முயற்சிகள் கைகூடும். 
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
11) 
சந்திர லக்கினத்துக்குப் பதினோராம் இடத்தில் சந்திரன் சஞ்சரிக்கும்போது; 
ஜாதகனுக்குப் பொருள் வரவும். அதனால் மனமகிழ்ச்சியும்.நண்பர்களது சந்திப்பும் உண்டாகும்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
12) 
சந்திர லக்கினத்திக்குப் பன்னிரண்டாம் இடத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் போது; 
ஜாதகனுக்குப் பண விரயம் ஏற்படும்.அவனுடைய கர்வத்தினாலேயே அவனுக்குக் கெடுதல் உண்டாகும்
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------


(கோசார செவ்வாயின் பலனகள்)
1) ஒரு ஜாதகனின் சந்தர லக்கினத்தில் செவ்வாய் சஞ்சரிக்கும்போது;
ஜாதகனுக்கு எல்லா வகைகளிலும் தொல்லைகள் உண்டாகும்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
2) சந்திர லக்கினத்தில் இரண்டாம் இடத்தில் செவ்வாய் சஞ்சரிக்கும்போது;
ஜாதகன் எவ்வளவுதான் ஆற்றலும் செல்வாக்கும் படைத்தவனாய் இருந்தாலும்.அவனுக்கு அரசாங்கத்தின் மூலமும் பகைவர்கள் மூலமும் கெடுதல்கள் ஏற்படும். சண்டை சச்சரவுகள். பித்தநோய்கள்.திருடர்கள்.நெருப்பு இவற்றால் தீங்குகள் தோன்றும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
3) சந்திர லக்கினத்துக்கு மூன்றாம் இடத்தில் செவ்வாய் சஞ்சரிக்கும்போது;
ஜாதகனுக்குத் திருடர்களாலும் சிறுவர்களாலும் நன்மை
உண்டாகும்.அவனது செல்வம் பெருகும்.உடல் நிலை சீர்படும். மற்றவர்களை அடக்கி ஆளக்கூடிய அதிகாரமும் நிலபுலன்களின் சேர்க்கையும் ஏற்படும்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
4) சந்திர லக்கினத்துக்கு நான்காம் இடத்தில் செவ்வாய் சஞ்சரிக்கும்போது;
ஜாதகனுக்குக் காய்ச்சலோ வயிற்று வலியோ ஏற்படுகிறது.
அவன் விரும்பாமலே அவனுக்குத் தீயவர்களுடைய தொடர்பும்,அதனால் தீமைகளும் உண்டாகும்.அவனுக்கு எதிலும் குறைவை உண்டாக்கும்படியான நிகழ்ச்சிகள் நடக்கும்.
-------------------------------------------------------------------------------
5) சந்திர லக்கினத்திக்கு ஐந்தாம் இடத்தில் செவ்வாய் சஞ்சரிக்கும்போது;
ஜாதகனுடைய பிள்ளைகளாலேயே அவனுக்குத் தொல்லைகள் உண்டாகும். பகைவர்களால் இடைஞ்சல் ஏற்படும். கோபமும் பயமும் அடிக்கடி தோன்றும். நோய்களால் உடல் அழகு குன்றும்.
-------------------------------------------------------------------------------
6) சந்திர லக்கினத்துக்கு ஆறாம் இடத்தில் செவ்வாய் சஞ்சரிக்கும்போது;
ஜாதகனுக்கு இருந்த பயங்களும் பகைமைகளும் விலகிவிடும்.சண்டைகள் சமாதானம் ஆகிவிடும். ஏராளமான செல்வம் உண்டாகும்.ஜாதகன் எவருடைய தயவையும் எதிர்பாராதவனாய் இருப்பான்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
7) சந்திர லக்கினத்துக்கு ஏழாம் இடத்தில் செவ்வாய் சஞ்சரிக்கும்போது;
ஜாதகனுக்கு அவனுடைய மனைவியோடு சண்டை ஏற்படும். கண் நோயும் வயிற்று வலியும் உண்டாகும்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
8) சந்திர லக்கினத்துக்கு எட்டாம் இடத்தில் செவ்வாய் சஞ்சரிக்கும்போது;
ஜாதகனுக்கு இரத்தப் போக்கு ஏற்படும். அவனுடைய பணத்துக்கும் கௌரவத்துக்கும் பழுது உண்டாகும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
9) சந்திர லக்கினத்துக்கு ஒன்பதாம் இடத்தில் செவ்வாய் சஞ்சரிக்கும்போது;
ஜாதகனுக்கு உடல் வலிமை குன்றும். பொருள் விரயமும் அலைச்சலும் அவமானமும் ஏற்படும். அவன் நடமாடுவதற்கும்கூட வலுவில்லாதவனாய்த் திரிவான்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
10) சந்திர லக்கினத்துக்கு பத்தாம் இடத்தில் செவ்வாய் சஞ்சரிக்கும்போது;
ஜாதகனுக்குப் பெரிய நன்மையோ தீமையோ ஏற்படமாட்டாது எனினும் பாதி காலம் (முற்பகுதி அதாவது) சிறிது தொல்லைகளும். பாதி காலம் (அதாவது பிற்பகுதி) சிறிது நன்மைகளும் ஏற்படும்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
11) சந்திர லக்கினத்துக்குப் பதினோராம் இடத்தில் செவ்வாய் சஞ்சரிக்கும்போது;
ஜாதகனுக்குத் தொட்டது எல்லாம் வெற்றியாகவே முடியும். ஏராளமான பொருள் வரவு ஏற்படும். அவன் தன்னைச் சூழ்ந்து உள்ள எல்லாரையும் காட்டிலும் மிக மேலான நிலையில் இருப்பான்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
12) சந்திர லக்கினத்துக்குப் பன்னிரண்டாம் இடத்தில் செவ்வாய் சஞ்சரிக்கும்போது;
ஜாதகனுக்குச் சொல்லமுடியாத தொல்லைகள் ஏற்படும்.பல வழிகளில் வீண் செலவுகள் நெரும். கண் வலியியினாலும்.பித்தநோயினாலும்.பெண்களுடைய கோபத்தினாலும் ஜாதகன் துன்பத்தை அடைவான்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

(கோசார சௌமியன் பலன்கள்)
1) ஒரு ஜாதகனின் சோமன் லக்கினத்தில் சௌமியன் சஞ்சரிக்கும்போது;
ஜாதகனுக்கு பல்வேறு வகைகளில் பொருள் விரயம் ஏற்படும்.அபவாதங்களும். பகைமைகளும், அச்சங்களும் உண்டாகும்.அவன் கட்டுப்பாடுகளுக்கு உட்பட நேரிடும் அவன் தன் வீட்டில் தங்குவதே அரிதாய் இருக்கும்,
2) சோமன் லக்கினத்துக்கு இரண்டாம் இடத்தில் சௌமியன் சஞ்சரிக்கும்போது;
ஜாதகனுக்கு மனக்குறையும் பணமுடையும் உண்டாகும்.
3) சோமன் லக்கினத்துக்கு மூன்றாம் இடத்தில் சௌமியன் சஞ்சரிக்கும்போது;
ஜாதகனுக்குப் புதிய நண்பர்கள் உண்டாவார்கள். அவனுடைய தீய செயல்களின் விளைவுகள் அவனை ஓயாது பயமுறுத்திக் கொண்டு இருக்கும்.
4) சோமன் லக்கினத்துக்கு நான்காம் இடத்தில் சௌமியன் சஞ்சரிக்கும்போது;
ஜாதகனுக்கு நல்ல பண வரவு ஏற்படும்,அவனுடைய குடும்பம் செழிப்பு அடையும், உறவினர்களின் நெருக்கமான தொடர்பு உண்டாகும்.
5) சோமன் லக்கினத்துக்கு ஐந்தாம் இடத்தில் சௌமியன் சஞ்சரிக்கும்போது;
ஜாதகனுக்கு அவனுடைய மனைவி மக்களுடன் பகைமை உண்டாகும். 
அவனுடைய கைக்கு எட்டிய தூரத்தில் இன்பங்கள் இருந்தாலும்.அவனால் அவற்றை அனுபவிக்க முடியாது.
6) சோமன் லக்கினத்துக்கு ஆறாம் இடத்தில் சௌமியன் சஞ்சரிக்கும்போது;
ஜாதகனுக்கு எல்லா மக்களிடையேயும் செல்வாக்குப் பெருகும். அவன் எடுத்த காரியங்கள் வெற்றி அடையும்.அவன் மேன்மை அடைவான்.
7)சோமன் லக்கினத்துக்கு ஏழாம் இடத்தில் சௌமியன் சஞ்சரிக்குக்போது;
ஜாதகன் சண்டை சச்சரவுகளால்.துன்பம் அடைவான். அவனது உடல் நலத்துக்குக்
குறைவு உண்டாகும். அவனுக்கு வீணான பேராசைகளும் இடையூறுகளும் ஏற்படும்.
8) சோமன் லக்கினத்துக்கு எட்டாம் இடத்தில் சௌமியன் சஞ்சரிக்கும்போது;
ஜாதகன் தான் நினைத்த காரியங்களை முடிப்பான்.அவனுக்கு புத்திர லாபம். தனலாபம் முதலியவை ஏற்படும். புத்தாடைகளும் கிடைக்கும்.அவன் மகிழ்ச்சி உடையவனாய் விளங்குவான்,கல்வியில் நுடபமான அறிவும் புகழும் உண்டாகும்.
அவன் பல பேர்களுக்கு உதவி செய்பவனாய் இருப்பான்,
9) சோமன் லக்கினத்துக்கு ஒன்பதாம் இடத்தில் சௌமியன் சஞ்சரிக்கும்போது;
ஜாதகனுக்கு எதிலும் இடையூறுகளே ஏற்பட்டுக்கொண்டு இருக்கும், வீண் பழியும். பகைமையும்; அலைச்சலும் ஏற்படும்.
10) சோமன் லக்கினத்துக்குப் பத்தாம் இடத்தில் சௌமியன் சஞ்சரிக்கும்போது;
ஜாதகனுடைய பகைவர்கள் ஒழிவார்கள்.அவன் நிரம்பப் பணம் சம்பாதிப்பான், இன்ப சுகங்களை அடைவான், மனமகிழ்ச்சியோடு வேடிக்கை விளையாட்டுகளில் பொழுதுபோக்குவான்;
11) சோமன் லக்கினத்துக்குப் பதினோராம் இடத்தில் சௌமியன் சஞ்சரிக்கும்போது:
ஜாதகனுக்கு அவனுதைய பிள்ளைகளாலும், இளமங்கையர்களாலும் லாபம் உண்டாகும், அவன் மிகவும் சுகமாக வாழ்வான், நிறையப் பணம் சம்பாதிப்பான். நண்பர்களின் உறவால் மகிழ்ச்சி அடைவான்.
12) சோமன் லக்கினத்துக்குப் பன்னிரண்டாம் இடத்தில் சௌமியன் சஞ்சரிக்கும்போது:
ஜாதகனுக்குப் பகைவர்களாலும் நோய்களாலும் துன்பங்கள் ஏற்படும். 1) சூரியன் சுக்கிரன் சனி இம்மூவரும் கூடி நின்றால்:
ஜாதகன் திமிர்படைத்தவனாகவும் தீச்செயல்கள் பரிபவனாகவும் இருப்பான்:
2) சூரியன் சோமன் செவ்வாய் சௌமியன் இந்நால்வரும் கூடி நின்றால்:
ஜாதகன் கூசாமல் பொய் பேசுவான், வஞ்சகனாக்வும் கெட்டிக்காரனாகவும் இருப்பான். அவன் ஓர் எழத்தாளனாகவும் இருக்கக்கூடும்
3) சூரியன் சோமன் செவ்வாய் குரு இந்நால்வரும் கூடி நின்றால்:
ஜாதகன் ஒரு தளபதியாக விளங்குவான், அவனிடம் உயர்ந்த குணங்களும்.புகழும்
செல்வமும் பொருந்தி இருக்கும், அவன் தன் மனைவி மக்களுடனும் நண்பர்களுடனும் இன்பமாக வாழ்வான்:
4) சூரியன் சோமன். செவ்வாய். சுக்கிரன். இந்நால்வரும் கூடி நின்றால்:
ஜாதகனுக்கு உறவினர்கள் இருக்கமாட்டார்கள். இருந்தாலும் அவர்களோடு அவனுக்கு தொடர்பு இராது. அவன் பெண்களிடத்தில் ஓயாத நாட்டம் உடையவனாய் இருப்பான். அத்துடன் கண் நோயினாலும் வருந்துவான்.
5) சூரியன் சோமன். செவ்வாய். சனி. இந்நால்வரும் கூடி நின்றால்;
ஜாதகன் தன் உற்றார் உறவினருக்கெல்லாம் பகைவனாய் இருப்பான் வறுமை வாழ்க்கை நடத்துவான்;
6) சூரியன். சோமன்.சௌமியன்,குரு. இந்நால்வரும் கூடி நின்றால்;
ஜாதகன் மிகவும் புத்திசாலியாகவும் பணக்காரனாகவும் இருப்பான்,ஓர் அரசனைப்போல வாழ்வான்.
7) சூரியன்.சோமன்.சௌமியன்.சுக்கிரன் இந்நால்வரும் கூடி நின்றால்:
ஜாதகன் ஒரு சங்கீத வித்துவானாகவும், தன் மனைவியிடத்தில் மிகவும் பிரியம் உள்ளவனாகவும் இருப்பான்.
8) சூரியன்,சோமன்,சௌமியன்,சனி, இந்நால்வரும் கூடி நின்றால்;
ஜாதகன் ஒரு பெரிய மனிதனாக விளங்குவான், ஆனால் நயவஞ்சகனாய் இருப்பான்,
9) சூரியன்,சோமன்,குரு, சுக்கிரன் இந்நால்வரும் கூடி நின்றால்;
ஜாதகனுடைய மனைவி மக்கள் மிக நலமாக வாழ்வார்கள்.
10) சூரியன்.சோமன்,குரு,சனி இந்நால்வரும் கூடி நின்றால்:
ஜாதகன் மிகவும் பொல்லாதவனாக இருப்பான். அவனுக்குப் பிள்ளைகள் இரார்.
பொருளும் இராது:
11) சூரியன்,சோமன்,சுக்கிரன்,சனி இந்நால்வரும் கூடி நின்றால்;
ஜாதகனுக்குத் தாய் தந்தையர் இருக்கமாட்டார்கள். மனைவியையும் இழந்து விடுவான்.
12) சூரியன்,செவ்வாய்,சௌமியன்,குரு இந்நால்வரும் கூடி நின்றால்;
ஜாதகன் கெட்டிக்காரனாக இருப்பான், நல்ல அழகு உடையவனாகவும் திகழ்வான்
13) சூரியன்,செவ்வாய்,சௌமியன்,சுக்கிரன் இந்நால்வரும் கூடி நின்றால்;
ஜாதகன் நாடகக் கலையில் அல்லது நடனக் கலையில் வல்லவனாய் இருப்பான்
14) சூரியன்,செவ்வாய்,சௌமியன்,சனி இந்நால்வரும் கூடி நின்றால்;
ஜாதகன் திருடனாய் இருப்பான்.கடனானியாக வாழ்வான்,தீச்செயல்களைச் செய்வான்,அவன் உடம்பில் காயங்கள் உண்டாகும்
15) சூரியன், செவ்வாய்,குரு, சோமன் இந்நால்வரும் கூடி நின்றால்;
ஜாதகன் பெரிய புத்திர சம்பத்தை உடையவனாக இருப்பான்,பல வீடுகளைக் கட்டுவான், பெரும் செல்வத்தைத் தேடுவான், பல பெண்களையும் மனைவியராகப் பெற்று இருப்பான்.
16) சூரியன், செவ்வாய், குரு, சனிஸ்வர இந்நால்வரும் கூடி நின்றால்;
ஜாதகனுக்கு மனைவி மக்கள் இருக்கமாட்டார்கள்;
17) சூரியன், செவ்வாய், குரு,சனிஸ்வர இந்நால்வரும் கூடி நின்றால்;
ஜாதகன் தன் மனைவி மக்கள் இழந்து பிச்சை எடுப்பான்.
18) சூரியன்,புதன்,குரு,சுக்கிரன் இந்நால்வரும் கூடி நின்றால்;
ஜாதகன் மன்மதனைப் போல் இன்ப சுகங்களை அனுபவிப்பான்.
19) சூரியன், புதன், குரு, சனி இந்நால்வரும் கூடி நின்றால்;
ஜாதகன் ஒரு கவிஞனாகவும் கல்விமானாகவும் இருப்பான்.ஆனால் வறியவனாக வாழ்வான்.
20) சூரியன்,புதன், சுக்கிரன், சனி இந்நால்வரும் கூடி நின்றால்;
ஜாதகன் தன் தாய் தந்தையருக்கு உற்றார் உறவினருக்கும் வேண்டாதவனாய் இருப்பான்,பெண்களிடம் மிகுதியாக நாட்டம் கொள்வான்.
(கோசார குருவின் பலன்கள்)
1) ஒரு ஜாதகனின் சோமன் லக்கினத்தில் குரு சஞ்சரிக்கும்போது:
ஜாதகன் தன் மனைவி மக்களை விட்டு விலகியிருக்க நேரலாம், அவனுக்கு வரவேண்டிய பொருளும் கைக்கு வராது, அவன் தன்னுடைய பதவியை இழக்கும்படி ஆகலாம்.
2) சோமன் லக்கினத்துக்கு இரண்டாம் இடத்தில் குரு சஞ்சரிக்கும்போது;
ஜாதகனுக்கு ஏராளமான செல்வப் பெருக்கு உண்டாகும், அவனுக்குப் பகைவர்களே இருக்கமாட்டார்கள்,அவன் தன் மனைவியோடு மிகவும் இன்பமாக
வாழ்ந்து கொண்டு இருப்பான்.
3) சோமன் லக்கினத்துக்கு மூன்றாம் இடத்தில் குரு சஞ்சரிக்கும்போது:
ஜாதகனுடைய உத்தியோகத்துக்கே ஆபத்து வரலாம், அவன் தன் வீடுவாசல்களை இழந்து ஊரைவிட்டே வெளியேற நேரலாம்,அவனுடைய கௌரவம் குன்றும்.அவன் எடுத்தகாரியங்களில் எல்லாம் இடையூறு நேரும். அவன் உள்ளம் மிகவும் வேதனைப்படும்
4) சோமன் லக்கினத்துக்கு நான்காம் இடத்தில் குரு சஞ்சரிக்கும்போது;
ஜாதகனுடைய உறவினர்களும் நண்பர்களுமே, அவனுக்குப் பகைவர்களாக மாறுவார்கள் அவர்களாலும் மற்றவர்களாலும் ஏற்படும் துன்பங்களால் அவன் வீட்டில் இருந்தாலும் காட்டில் இருந்தாலும் சுகத்தை அடைய மாட்டான் 5) சோமன் லக்கினத்துக்கு ஐந்தாம் இடத்தில் குரு சஞ்சரிக்கும்போது:
ஜாதகனுக்கோ அவனது குடும்பத்தில் வேறு யாருக்காவதோ திருமணம் முதலிய சுப காரியங்கள் நடைபெறும், அவனுக்கு குழந்தை பிறக்கும், புதிய வாகன வசதிகள் ஏற்படும்.அவனுக்கு கீழே பலர் வேலை செய்வார்கள்.
அத்துடன் அவன் புதிய வீடுகளைக் கட்டுவான், ஆடை ஆபரணங்களை அடைவான்,கல்வியில் தேர்ச்சி பெறுவான், உள்ளத்தில் ஊக்கம் உடையவனாய் இருப்பான் ஏராளமான செல்வங்களைச் சம்பாதித்து இன்பமாக வாழ்வான்,
6) சோமன் லக்கினத்துக்கு ஆறாம் இடத்தில் குரு சஞ்சரிக்கும்போது;
ஜாதகனுக்கு அவன் மனைவி கூட எதிரியாக இருப்பாள்: எவ்வளவு இன்பமான சூழ்நிலையும் அவனுக்குத் துன்பமாகவே இருக்கும்.
7) சோமன் லக்கினத்துக்கு ஏழாம் இடத்தில் குரு சஞ்சரிக்கும்போது:
ஜாதகனுடைய வாழ்க்கையில் எல்லா இன்பங்களும் பெருகுகின்றன அவனுடைய அறிவில் தெளிவும், பேச்சில் இனிமையும் ஏற்படுகின்றன, அவனுக்கு ஏராளமான செல்வப் பெருக்கும் உண்டாகிறது.
சோமன் லக்கினமும் ஜென்ம லக்கினமும் சில ஜாதகர்களுக்கு ஒரே இராசியாக இருக்கும்,அந்த இராசியானது கடகமாகவோ கன்னியாகவோ இருக்குமாயின், அதற்கு ஏழாம் இடத்தில் குரு சஞ்சரிக்கும்போது, மேற்கூறிய சுபபலனகள் நடைபெறமாட்டார்?
8) சோமன் லக்கினத்துக்கு எட்டாம் இடத்தில் குரு சஞ்சரிக்கும்போது:
ஜாதகன் ஏதாவது ஒரு வகையில் கட்டுப்பட நேரும் அவனுக்கு நோயும் கவலைகளும் ஏற்படும்,பிரயாணங்களினால் துன்பமும்,உயிருக்கே ஆபத்து உண்டாவது போன்ற சூழ்நிலைகளும், எடுத்த காரியங்களில் எல்லாம் இடையூறுகளும் உருவாகும
9) சோமன் லக்கினத்துக்கு ஒன்பதாம் இடத்தில் குரு சஞ்சரிக்கும்போது;
ஜாதகனுக்குப் புதுமையான ஆற்றல்களும் அதிகாரங்களும் ஏற்படுகின்றன,
மகப்பேறு உண்டாகிறது,எடுத்த காரியங்கள் அனைத்தும் அவன் விருப்பம்போல், 
முடிகின்றன,நிலபுலன்களின் சேர்க்கை ஏற்படுகிறது திருமணமோ அல்லது அதைப் போன்ற இன்ப உறவுகளோ கைகூடுகின்றன.
10) சோமனுக்குப் பத்தாம் இடத்தில் குரு சஞ்சருக்கும்போது:
ஜாதகனுடைய பதவி பறிபோகும்,உடல் நலம் கெடும்,கைப் பொருளும் விரயமாகிவிடும்,
11) சோமனுக்குப் பதினோராம் இடத்தில் குரு சஞ்சரிக்கும்போது;
ஜாதகனுக்கு முன்பு பறிபோன பதவி திரும்பக் கிடைககும்,உடல் நலம் ஏற்படும்,இழந்துபோன பொருள்களும் கைகூடும்,
12) சோமனுக்குப் பன்னிரண்டாம் இடத்தில் குரு சஞ்சரிக்கும்போது;
ஜாதகன் வழி தவறிச் செல்வதால் ஏற்படும் துன்பங்களுக்கு ஆளாவான்,
(கோசார பிருகு பலன்கள்)
1) ஒரு ஜாதகனின் சோமன் லக்கினத்தில் பிருகு சஞ்சரிக்கும்போது;
ஜாதகனுக்குச் சிறப்பான இன்ப அனுபவங்களும் ஏராளமாக உண்டாகும்,அத்துடன் அவனுக்குப் புதிய பதவிகள்,வாகன வசதிகள்,மகப்பேறு, கல்விப்பேறு ஆகியவையும் ஏற்படும்,
2) சோமன் லக்கினத்திக்கு இரண்டாம் இடத்தில் பிருகு சஞ்சரிக்கும்போது;
ஜாதகனுக்கு நிறைய பண வரவு உண்டாகும்,அவனுக்குச் செல்வர்களின் நட்பு ஏற்படும், குடும்பத்தில் மகிழ்ச்சி ததும்பும்,மகப்பேறு நிகழலாம், ஜாதகன் தன் மனம் கொண்ட மட்டும் இன்பங்களை அனுபவிப்பான்,
3) சோமன் லக்கினத்துக்கு மூன்றாம் இடத்தில் பிருகு சஞ்சரிக்கும்போது;
ஜாதகனுக்குப் புதிய பதவிகளும் அதிகாரங்களும் ஏற்படும், அவனது செல்வமும் கௌரவமும் பெருகும் அவனுடைய பகைவர்களுக்குக் கேடு உண்டாகும்,
4) சோமன் லக்கினத்துக்கு நாலாம் இடத்தில் பிருகு சஞ்சரிக்கும்போது:
ஜாதகனைப் பிரிந்து இருந்த நண்பர்கள் மறுபடியும் வந்து சேருவார்கள், அவனுக்கு அளவற்ற ஆற்றல்கள் ஏற்படும்.
5) சோமன் லக்கினத்துக்கு ஐந்தாம் இடத்தில் பிருகு சஞ்சரிக்கும்போது:
ஜாதகனுக்கு மிகுதியான மகிழ்ச்சிகள் ஏற்படும்.மேலோர்களின் ஆசி உண்டாகும்.
உறவினர்களும் நண்பர்களும் அவனுக்கு நன்மையான காரியங்களைச் செய்வார்கள், மகப்பேறு உண்டாகலாம்.பொருட்பேறு கட்டாயம் உண்டாகும் அவனுக்குப் பகைவர்களே இருக்கமாட்டார்கள்.
சோமன் லக்கினத்துக்கு ஆறாம் இடத்தில் பிருகு சஞ்சரிக்கும்போது;
ஜாதகனுக்கு அவமானங்கள்.நோய்கள்.துன்பங்கள் ஆகியவை ஏற்படும்.
சோமன் லக்கினத்துக்கு ஏழாம் இடத்தில் பிருகு சஞ்சரிக்கும்போது:
ஜாதகனுக்கு பெண்களால் கெடுதியோ ஆபத்தோ உண்டாகும்.
சோமன் லக்கினத்துக்கு எட்டாம் இடத்தில் பிருகு சஞ்சரிக்கும்போது:
ஜாதகனுக்குப் புதிய வீடுகளும் வேலைக்காரர்களும் கிடைப்பார்கள்.இன்ப உறவுகளும் ஏற்படும்.
சோமன் ஒன்பதாம் இடத்தில் பிருகு சஞ்சரிக்கும்போது;
ஜாதகனுக்கு ஏராளமான பொருளின் வரவு ஏற்படும்.இவன் பல தான தருமங்களைச் செய்துகொண்டு மனைவி மக்களுடன் இன்பவாழ்வு வாழ்வான்
சோமன் பத்தாம் இடத்தில் பிருகு சஞ்சரிக்கும்போது;
ஜாதகன் சண்டை வம்புகளுக்கும் அவமானத்துக்கும் ஆளாவான்,
சோமன் பதினோராம் இடத்தில் பிருகு சஞ்சரிக்கும்போது:
ஜாதகனுக்கு நண்பர்கள் பெருகுவார்கள் அவன் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பான்
சோமன் பன்னிரண்டாம் இடத்தில் பிருகு சஞ்சரிக்கும்போது;
ஜாதகன் இன்ப வாழ்வு வாழ்வான்.ஆனால் அவனுடைய சில உடைமைகளுக்குக் கேடு உண்டாகும்.


(கோசார சனியின் பலன்கள்)
1) ஒரு ஜாதகனின் சோமன் லக்கினத்துல் மந்தன் சஞ்சரிக்கும்போது;
ஜாதகனுக்கு விஷத்தினாலோ, நெருப்பினாலோ ஆபத்துக்கள் ஏற்படும். அவனுக்கு நெருக்கமான உறவினர்களது பிரிவு ஏற்படும். உறவினர்களுக்கும் அவனால் கேடு
ஏற்படும் அவனது நண்பர்களும் பகைவர்கள் ஆவார்கள். அவன் தன் வீடு வாசல்களை இழப்பான், சொந்த ஊரை விட்டும் வெளியேறிவிடுவான். அவனுடைய பணம் கெட்ட வழிகளில் செலவு ஆகும், அவனுடைய புத்தியும் கெட்ட வழிகளில் செல்லும், அவன் எப்போதுமே வாடியமுகத்தோடு காணப்படுவான்,
2) சோமன் லக்கினத்துக்கு இரண்டாம் இடத்தில் மந்தன் சஞ்சரிக்கும்போது;
ஜாதகனுடைய உடல் நலம் சீர்கெடும், அவன்து தோற்றத்தில் இருந்த பொலிவு போய்விடும், அவனது கர்வமும் ஆற்றலும் குலைந்துவிடும்.அவனது கர்வமும் ஆற்றலும் குலைந்துவிடும். தன்னால் நேர்மையான வழிகளில் சம்பாதிக்கப்பட்ட பொருள்களைக்கூட அவன் இழந்து விடுவான்
3) சோனன் லக்கினத்துக்கு மூன்றாம் இடத்தில் மந்தன் சஞ்சரிக்கும்போது;
ஜாதகன் ஏராளமான பணம் சம்பாதிப்பான். அவன் மண்ணைத் தொட்டாலும் பொன் ஆகும். அவனுடைய நோய்கள் விலகிவிடும். எவரைக் கண்டும் அஞ்சாத ஊக்கம் பிறக்கும். வெல்லமுடியாத பகைவர்களையும் அவன் எளிதில் வென்றுவிடுவான். பிதிதான வீடுகளும் பதவிகளும் அவனுக்கு ஏற்படும்.
4) சோமன் லக்கினத்துக்கு நான்காம் இடத்தில் மாந்தன் சஞ்சரிக்கும்போது;
ஜாதகன் தன் குடும்பத்தை விட்டே விலகியிருக்க நேரலாம். நண்பர்களை விட்டுப் பிரிந்து இருக்க நேரலாம். அவனுடைய பொருள் விரயம் ஆகும், அவனுடைய அறிவு தீய வழிகளிலேயே சென்றுகொண்டு இருக்கும் அதனால் அவன் பல கேடுகளுக்கு ஆளாவான்,
5) சோமன் ஐந்தாம் இடத்தில் மந்தன் சஞ்சரிக்கும்போது;
ஜாதகனுடைய பிள்ளைகளுக்குக் கேடு உண்டாகும், அவன் அடிக்கடி சண்டை சச்சரவுகளில் ஈடுபடுவான், அதனால் அவனுடைய பொருளுக்கு கேடு உண்டாகும்,
6) சோமன் ஆறாம் இடத்தில் மந்தன் சஞ்சரிக்கும்போது;
ஜாதகனுடைய நோய் நொடிகள் எல்லாம் அறவே ஒழிந்துவிடும். அவனுடைய கொடிய பகைவர்களுங்கூட அவனுக்கு வசப்பட்டுவிடுவார்கள். அல்லது அழிந்து விடுவார்கள். அவன் ஆசைப்படுகிற இன்பங்கள் எல்லாம் கைகூடும். அத்துடன்
ஏராளமான பொருள் வசதிகளும் ஏற்படும்.
7) சோமன் லக்கினத்துக்கு ஏழாம் இடத்தில் மந்தன் சஞ்சரிக்கும்போது;
ஜாதகன் ஊர் ஊராய்த் திரிந்து அலைவான், அவன் தேவயில்லாத உழைப்புக்கும் தொல்லைக்கும் ஆளாவான். மனைவி மக்களால் வெறுக்கப்படுவான். அல்லது அவர்களிடமிருந்து பிரிக்கப்படுவான்.
8) சோமன் லக்கினத்துக்கு எட்டாம் இடத்தில் மந்தன் சஞ்சரிக்கும்போது;
ஜாதகனுக்கு ஏற்படக்கூடாத நஷ்டங்கள் ஏற்படும். வரக்கூடாத துன்பங்கள் வரும். அவனைக் கவலைகளும் நோய்களும் பிடுங்கித் தின்னும். அவன் பட்டினி கிடக்கவும் நேரிடலாம். அவனுக்குக் கீழ் நிலையில் உள்ளவர்களும்கூட அவனை மதிக்க மாட்டார்கள்.அவனை எவரும் நம்பமாட்டார்கள்.
9) சோமன் லக்கினத்துக்கு ஓன்பதாம் இடத்தில் மந்தன் சஞ்சாரிக்கும்போது;
ஜாதகனுக்கு நோய் ஏற்படும். வீண் அலைச்சல்கள் ஏற்படும். பொருள்கள் கையைவிட்டுப் போகும். வறுமை உண்டாகும். பகைமை வளரும் மன அமைதி போய்விடும்.
10) சோமன் லக்கினத்துக்குப் பத்தாம் இடத்தில் மந்தன் சஞ்சாரிக்கும்போது;
ஜாதகனுக்கு ஒரு புதிய உத்தியோகமோ தொழிலோ ஏற்படும். ஆனால் பொருளும் விரயம் ஆகும். அறிவின் கூர்மை மழுங்கும். கெட்ட பெயர் உண்டாகும்.
11) சோமன் லக்கினத்துக்குப் பதினோராம் இடத்தில் மந்தன் சஞ்சாரிக்கும்போது;
ஜாதகனுடைய கோபத்துக்கு எல்லோரும் பயப்படுவார்கள். பிறரைச் சேரவேண்டிய இன்பங்களும் செல்வங்களும் இவனை வந்து சேரும். வேறொருவனை மணக்க வேண்டிய பெண் இவனை மணப்பாள்; ஜாதகனுடைய புகழ் பெருகும். அவன் நினைத்த காரியம் நடக்கும். அவன்து நிலை உயரும்,
12) சோமனுக்குப் பன்னிரண்டாம் இடத்தில் மந்தன் சஞ்சாரிக்கும்போது;
ஜாதகனுக்குப் பிரச்சினைகளும் கவலைகளும் ஓன்றன் பின் ஒன்றாய் வந்து கொண்டிருக்கும்,
1) ஆதித்தியன். பிறகத்பதி. பிறுகு.மந்தஹ; இந்நால்வரும் கூடி நின்றால்;
ஜாதகன் தரித்திரனாய் இருப்பான் தன் மனைவியினால் அவமானத்துக்கு ஆளாவான்,
2) ஆதித்தியன், சோமன், அங்காரகன்,புதன், குரு, இந்த ஐவரும் கூடி நின்றால்:
ஜாதகன் போர்க் கலையில் வல்லவனாய் இருப்பான்.கோள்சொல்வதிலும் கெட்டிக்காரனாய் இருப்பான்.
3) பானு,இந்து, மங்கல, புதன்.பிறுகு இந்த ஐவரும் கூடி நின்றால்;
ஜாதகன் கருணை உடையவனாக இருப்பான், அனால் தன் விருப்பம்போல் பிறருக்குக் கொடுத்து உதவுவதற்குஅவன் கையில் பணம் இராது;
4) பானு, சோமன், மங்கள, புதன், மந்தன் இந்த ஐவரும் கூடி நின்றால்;
ஜாதகனுக்குப் பிள்ளைகள் இரார், அவன் பேராசைக்காரனாகவும் அற்ப ஆசை உடையவனாகவும் இருப்பான்,
5) பானு, சோமன், மங்கள, குரு,பிறுகு இந்த ஐவரும் கூடி நின்றால்:
ஜாதகன் பிறரை ஏமாற்றுவதில் கெட்டிக்காரனாக இருப்பான், அவன் தன் உற்றார் உறவினருக்கு எல்லாம் பகைவனாய் இருப்பான்,
6) பானு, சோமன், மங்கள, குரு, மந்தன் இந்த ஐவரும் கூடி நின்ரால்;
ஜாதகன் கண் நோய் உடையவனாக இருப்பான், அவனுக்கு மனைவி இருக்கமாட்டாள்;
7) பானு, சோமன், மங்கள்,பிறுகு மந்தன், இந்த ஐவரும் கூடி நின்றால்;
ஜாதகன் தீய ஆசைகளை உடையவனாகவும் இரந்தும் அல்லது (யாசித்து)
உண்பவனாகவும் இருப்பான்,
8) பானு,சோமன்,புதன்,குரு,பிருகு இந்த ஐவரும் கூடி நின்றால்;
ஜாதகன் நல்ல அறிவாளியாகவும் பணக்காரனாகவும் இருப்பான்
9) பானு,சோமன்,புதன்,குரு,மந்தன் இந்த ஐவரும் கூடி நின்றால்;
ஜாதகன் மது அருந்துவதில் பிரியம் உள்ளவனாக இருப்பான்
10) பானு,சோமன்,புதன்,குரு,பிறுகு இந்த ஐவரும் கூடி நின்றால்;
ஜாதகன் வறியவனாகவும் திருடனாகவும் இருப்பான்,
11) பானு, சோமன்,குரு,பிறுகு,மந்தன் இந்த ஐவரும் கூடி நின்றால்;
ஜாதகன் நல்ல மனைவியைப் பெற்று இருப்பான்,அவன் தூய உள்ளம் படைத்தவனாகவும் கல்விமானாகவும் விளங்குவான்
12) பானு, மங்கள், புதன், குரு, பிருகு இந்த ஐவரும் கூடி நின்றால்;
ஜாதகன் ஒரு தளபதியாகவும், பெண்களிடத்தில் வேட்கையுடையவனாகவும் இருப்பான்,
13) பானு,மங்கள், புதன்,குரு, மந்தன் இந்த ஐவரும் கூடி நின்றால்;
ஜாதகன் குளிக்காமலும், அழுக்கு ஆடைகளை உடுத்துக் கொண்டும்,இரந்து உண்பவனாகவும் இருப்பான்,
14) பானு,மங்கள்,புதன்,பிறுகு, மந்தன்,இந்த ஐவரும் கூடி நின்றால்;
ஜாதகன் எந்த கொடிய பாபத்துக்கும் அஞ்சாதவனாகவும், சிறிது மன அமைதியும் இல்லாதவனாகவும் இருப்பான்,
15) பானு, புதன்,குரு,பிறுகு, மந்தன் இந்த ஐவரும் கூடி நின்றால்;
ஜாதகன் தெய்வ பக்தி உள்ளவனாகவும் எல்லாரிடத்தும் அன்பு உடையவனாகவும்
இருப்பான்,
16) பானு,சோமன்,மங்கள்,புதன்,குரு,பிறுகு இந்த அறுவரும்கூடி நின்றால்;
ஜாதகன் அடிக்கடி தீர்த்தயாத்திரைகள் செல்வான்,
17) பானு,சோமன்,மங்கள்,புதன்,குரு,மந்தன் இந்த அறுவரும் கூடி நின்றால்;
ஜாதகன் திருட்டுத் தொழிலில் மிக வல்லவனாய் இருப்பான்,
18) பானு,சோமன்,மங்கள்,புதன்,குரு,பிறுகு,மந்தன், இந்த ஏழு பேரும் கூடி நின்றால்;
ஜாதகன் ஒரு மாபெரும் தவ முனிவனாக விளங்குவான்,
(சோமன்)
1) சோமன், மங்கள் கூடி நின்றால்;
ஜாதகன் நல்ல பாக்கியவானாகவும், மன உறுதி படைத்தவனாகவும் விளங்குவான்
2) சோமனும், புதனும், கூடி நின்றால்;
ஜாதகன் பொய் பேசுவான், பிறருக்காகத் தூது செல்வான், நல்ல புலமை உள்ளவனாகவும் இருப்பான்,
3)சோமனும்,குருவும், கூடி நின்றால்;
ஜாதகன் பெரியோர்களுக்கு பிரியமானவனாய் இருப்பான்,
4) சோமனும், பிறுகுவும், கூடி நின்றால்:
ஜாதகன் ஒழுக்க்க்கேடனாக இருப்பான்,
5) சோமனும், மந்தனும் கூடி நின்றால்;
ஜாதகனுடைய மனைவி பொல்லாதவளாய் இருப்பாள் ஜாதகன் வறியவனாக இருப்பான்,
6) சோமன், மங்கள்,புதன், இம்மூவரும் கூடி நின்றால்:
ஜாதகன் என்றும் அறநெறியைவிட்டு விலகாதவனாகவும், எல்லோருக்கும் நல்லவனாகவும் மக்கள் பேறு உள்ளவனாகவும் இருப்பான்.
7) சோமன், மங்காள்,குரு, இம்மூவரும் கூடி நின்றால்;
ஜாதகன் பிணியாளனாகவும் வறியவனாகவும்,தீச்செயல்களில் ஈடுபடுபவனாகவும் இருப்பான்.
8) சோமன்,மங்கள்,பிறுகு இம்மூவரும் கூடி நின்றால்;
ஜாதகன் மனைவி மக்கள் இல்லாதவனாகவும், ஒழுக்கக்கேடனாகவும், எவருக்கும் கட்டுப்படாதவனாகவும், ஊர்சுற்றுபவனாகவும் இருப்பான்.
9) சோமன், மங்கள், மந்தன் இம்மூவரும் கூடி நின்றால்;
ஜாதகன் அவமான்த்துக்கு ஆளாவான்,
10) சோமன், புதன், குரு இம்மூவரும் கூடி நின்றால்;
ஜாதகன் அழகான கண்களை உடையவனாய் இருப்பான், அழ்கான் சொற்களைப் பேசுவான்,அறிவிலும் செல்வத்திலும் பெரியவனாக இருப்பான்.
11)சோமன், புதன், பிறுகு இம்மூவரும் கூடி நின்றால்;
ஜாதகன் தீயவர்களின் நட்பை உடையவனாய் தீச் செயல்களில் ஈடுபடுவான்,
12) சோமன், புதன், மந்தன் இம்மூவரும் கூடி நின்றால்;
ஜாதகன் மிகுந்த மானமுள்ளவனாகவும் நல்லவனாகவும், சுகபோகங்களைக் குறைவின்றி அனுபவிப்பவனாகவும் இருப்பான்
`13) சோமன், குரு, பிறுகு இம்மூவரும் கூடி நின்றால்;
ஜாதகன் நல்ல குடியில் பிறந்தவனாகவும், நற்புத்திபடைத்தவனாகவும் எல்லாரிடத்தும் அன்பு உள்ளவனாகவும் இருப்பான்
14) சோமன்,குரு மந்தன் இம்மூவரும் கூடி நின்றால்:
ஜாதகன் தன்னைக் காட்டிலும் மூத்தவளான மனைவியை மணம்புரிவான்.எல்லாரிடமும் இனிக்கப் பேசுவான்.
15) சோமன், பிறுகு, மந்தன் இம்மூவரும் கூடி நின்றால்:
ஜாதகன் ஒரு புரோகிதனாக இருப்பான், நல்லொழுக்க்ம் உள்ளவனாகவும் இருப்பான்.
16) சோமன்,மங்கள்,புதன்,குரு இந் நால்வரும் கூடிநின்றால்:
ஜாதகன் பெரிய இராஜவசியம் உள்ளவனாகவும், புத்திமானாகவும், புகழ்படைத்தவனாகவும் விளங்குவான்.
17)சோமன்,மங்கள்,புதன், பிறுகு இந்நால்வரும் கூடி நின்றால்:
ஜாதகன் அழகு இல்லாதவனாக இருப்பான், ஆனால் அவன் மனைவி மிகவும் அழகு உடையவளாக விளங்குவாள், அத்துடன் ஜாதகனுக்கு ஏதேனும் ஒரு வகையில் நல்ல கீர்த்தி ஏற்படும்,
18 ) சோமன், மங்கள் புதன், மந்தன் இந்நால்வரும் கூடி நின்றால்:
ஜாதகன் ஒயாமல் தூங்கிக்கொண்டே இருப்பான்,அவன் உள்ளத்தில் அக்கிரம்மான ஆசைகள் பிறக்கும்,
19) சோமன், மங்கள், குரு,பிறுகு இந்நால்வரும் கூடி நின்றால்;
ஜாதகன் மனவலிமை மிக்கவனாகவும் சுகவாழ்வில் திளைப்பவனாகவும் இருப்பான்,
20)சோமன், மங்கள், பிறுகு, மந்தன் இந்நால்வரும் கூடி நின்றால்;
ஜாதகனின் மனைவி கோபக்காரியாக இருப்பாள்.
21) சோமன், மங்கள், பிறுகு, மந்தன் இந்நாலவரும் கூடி நின்றால்;
ஜாதகனுக்குச் செவி சிறிது மந்தமாக இருக்கும் ஆனால் அன்பிலும் அறிவிலும்,புகழிலும்,செல்வத்திலும் அவன் மிகவும் பெரியவனாக இருப்பான்
22) சோமன், புதன், குரு, பிறுகு இந்நால்வரும் கூடி நின்றால்:
ஜாதகனுக்கு உற்றார் உறவினர் இருக்கமாட்டார்கள்,அப்படியே அவர்கள் இருந்தாலும் அவர்களோடு அவனுக்குத் தொடர்புஇருக்காது, ஆனால் ஜாதகன் நல்ல பணக்காரனாக இருப்பான்,
23) சோமன்,புதன், குரு,மந்தன் இந்நால்வரும் கூடி நின்றால்;
ஜாதகன் பல பெண்களோடு தொடர்பு கொண்டவனாக இருப்பான்,
24) சோமன், புதன், பிறுகு, மந்தன் இந்நால்வரும் கூடி நின்றால்:
ஜாதகன் எல்லாரையும் வீணே பகைத்துக் கொள்வான் சிறிய சங்கதிகளுக்கு எல்லாம் தகராறு செய்வான்,
25) சோமன், குரு, பிறுகு, மந்தன் இந்நால்வரும் கூடி நின்றால்;
ஜாதகன் திறமை அற்றவன் என்றும் பொல்லாதவன் என்றும் பேர் எடுப்பான்,அடிக்கடி கவலை அடைபவனாகவும் இருப்பான்
26) சோமன், மங்கள், புதன்,குரு,பிருகு இந்த ஐவரும் கூடி நின்றால்:
ஜாதகன் நற்குடியில் பிறந்தவன்,நல்லவன்,செல்வம் மிக்கவன்
27) சோமன்,மங்கள்,புதன்,குரு, மந்தன் இந்த ஐவரும் கூடி நின்றால்;
ஜாதகன் பெருமைக்கு உரியவனாய் இருப்பான். ஆனால் வறுமையில் வாழ்வான்
28)சோமன்,மங்கள்,புதன்,பிறுகு,மந்தன் இந்த ஐவரும் கூடி நின்றால்:
ஜாதகன் இரந்து உண்பவனாய் இருப்பான்
29) சோமன், மங்கள்,குரு,பிறுகு, மந்தன் இந்த ஐவரும் கூடி நின்றால்;
ஜாதகன் எப்போதும் உழைக்காமலே பணம் தேடுவதில் விருப்பம் உடையவனாய் இருப்பான்,
30) சோமன்,புதன்,குரு,பிறுகு,மந்தன் இந்த ஐவரும் கூடி நின்றால்;
ஜாதகன் ஏதேனும் அங்கக் குறைவு உடையவனாய் இருப்பான்
31) சோமன்,மங்கள்,புதன்,குரு,பிறுகு,மந்தன் இந்த அறுவரும் கூடி நின்றால்;
ஜாதகன் ஓர் ஒப்புயர்வற்ற அறிவாளியாக இருப்பான்,ஆனால் தூய்மை அற்றவனாகக் காட்சி அளிப்பான்
(மங்கள்)
1) மங்களும்,புதனும் கூடி நின்றால்;
ஜாதகன் செல்வந்தனாகவும் அறிவாளியாகவும் விளங்குவான் அவன் மருத்துவக் கலையில் ஆற்றல் உடையவனாக இருப்பான்
2) மங்களும், குருவும் கூடி நின்றால்;
ஜாதகன் உயரிய குணங்களை உடையவனாகவும் சோதிடக்கலையில் வல்லவனாகவும் விளங்குவான்,
3) மங்களும், பிறுகுவும் கூடி நின்றால்;
ஜாதகன் நல்ல விஞ்ஞான அறிவு படைத்தவனாய் இருப்பான்.ஆனால் உலகின் விவகாரங்களில் அசடாக இருப்பான்
4) மங்களும், மந்தனும் கூடி நின்றால்:
ஜாதகன் ஒரு வாய்ப்பாட்டு வித்துவானாக இருப்பான் ஆனால்; அவன் உள்ளம்
எப்போதும் சஞ்சலம் அடைந்து கொண்டு இருக்கும்
5) மங்கள், புதன், குரு இம்மூவரும் கூடி நின்றால்:
ஜாதகன் வாத்தியங்களில் தேர்ச்சி உள்ள வித்துவானாக இருப்பான், நடனக் கலையிலும் ஆர்வம் உள்ளவனாய், இருப்பன்,
6) மங்கள், புதன், பிறுகு இம்மூவரும் கூடி நின்றால்;
ஜாதகன் ஏதேனும் ஒரு அங்கத்தில் பழுது உடையவனாக இருப்பான்,
7) மங்கள்,புதன், மந்தன் இம்மூவரும் கூடி நின்றால்;
ஜாதகனுக்கு உறவினரோடு தொடர்பு இருக்காது அவன் என்றைக்கும் பிறருக்கு அடங்கியே வாழ்பவனாய் இருப்பான்
8) மங்கள், குரு,பிறுகு இம்மூவரும் கூடி நின்றால்;
ஜாதகன் அரசாங்கத்தில் செல்வாக்கு உள்ளவனாகவும் பெரிய மனிதகளோடு நெருங்கிய தொடர்பு உடையவனாகவும் இருப்பான்
9) மங்கள், குரு, மந்தன், இம்மூவரும் கூடி நின்றால்;
ஜாதகன் பெரும் செல்வந்தனாகவும் பெண்களின் உறகவால் கெட்ட பெயர் எடுப்பாவனாகவும் இருப்பான்.
10) மங்கள், பிறுகு,மந்தன் இம்மூவரும் கூடி நின்றால்;
ஜாதகனுடைய புதல்வன் தீய குணம் படைத்தவனாய் இருப்பான்
11) மங்கள், புதன், பிருகு,குரு இந்நாலவரும் கூடி நின்றால்;
ஜாதகன் மிகவும் சாந்த குணம் படைத்தவனாக இருப்பான் ஆனால் எவரையுமே அவனுக்கு பிடிக்காது
12) மங்கள்,புதன், பிறுகு,மந்தன் இந்நாலவரும் கூடி நின்றால்:
ஜாதகன் அடிக்கடி பணத்துக்கு முடைப்படுவான்
13) மங்கள்,குரு, பிருகு,மந்தன் இந்நால்வரும் கூடி நின்றால்;
ஜாதகன் பிறருக்கு கீழே வேலை செய்தாலும்,அவனுக்கு மேலே உள்ளவர்கள் அவனைக் கண்டு அஞ்சுவார்கள்
14) மங்கள், புதன்,குரு,பிறுகு, மந்தன் இந்த ஐவரும் கூடி நின்றால்;
ஜாதகன் பிறர் பொருளைக் கவர்வதில் மிகவும் கெட்டிக்காரன் என்று பெயர் எடுப்பான்,

 

(புதன்)

1)புதனும், குருவும் கூடி நின்றால்;

ஜாதகன் ஓர் அழகனாகவும் அறிஞனாகவும் செல்வந்தனாகவும் விளங்குவான்,

2)புதனும், பிறுகுவும் கூடி நின்றால்;

ஜாதகன் மிகவும் வேடிக்கையாகப் பேசி எல்லாரையும் மகிழ்விப்பான்,சங்கீத வித்துவானாகவும் இருப்பான்,

3) புதனும், மந்தனும் கூடி நின்றால்;

ஜாதகன் கணிதக் கலையில் வல்லவனாக இருப்பான், அவனுக்குயாருமே பகைவர்களாய் இருக்கமாட்டார்கள்.அவன் ஒரு சிறந்த கல்விமானாகவும் கண்ணியவானாகவும் விளங்குவான்.

4) புதன், குரு, பிருகு இம்மூவரும் கூடி நின்றால்;

ஜாதகன் எல்லாவகையான இன்பப் பேறுகளையும் உடையவனாக இருப்பான

5) புதன், குரு, மந்தன் இம்மூவரும் கூடி நின்றால்;

ஜாதகன் தன் வாயால் பொய் பேச விரும்பாத புனிதவானாய் இருப்பான், ஆனால், பல பெண்களை மருவி மகிழ்வதில் ஆசை கொண்டவனாக இருப்பான்.

6) புதன்.பிறுகு. மந்தன் இம்மூவரும் கூடி நின்றால்;

ஜாதகன் மிகவும் மாட்சிமை உடையவனாய் விளங்குவான்.

7) புதன், குரு, பிறுகு,மந்தன் இந்நால்வரும் கூடி நின்றால்;

ஜாதகன் ஓர் அரிமாவைப் போன்று எதற்கும் அஞ்சாதவனாய் இருப்பான்.

(குரு)

குருவும்.பிறுகுவும் கூடி நின்றால்;

ஜாதகன் ஓர் ஆணழகனாகவும் பணக்காரனாகவும் இருப்பான்.

குருவும். மந்தனும் கூடி நின்றால்;

ஜாதகன் ஓர் அறிவில்லாயாக இருப்பான

குரு, பிறுகு.மந்தன் இம்மூவரும் கூடி நின்றால்;

ஜாதகன் சுகபோகமாக வாழ்வான் வாழ்க;

( பிறுகு)

பிருகும் மந்தனும் கூடி நின்றால்;

ஜாதகன் பல ஆண்களையும் பெண்களையும் தன் பணியாளர்களாகப் பெற்று இருப்பான், ஆனால். தன் மனிவியால் துன்பமும் அவமானத்துக்கு ஆளாவான்

எந்த ஒரு கிரகத்தையும் முற்றிலும் சுபமானது என்றோ முற்றிலும் அசுபமானது என்றோ தீர்மானித்து விடாதீர்கள் எல்லாக் கிரகங்களும். எல்லாத்தசாபுக்திகளும்.

எல்லாக் கோசார நிலைகளும். நன்மையும் தீமையும் கலந்தவைகளாகத்தான் இருக்குமே தவிர. முற்றிலும் நன்மையாகவோ. முற்றிலும் தீமையாகவோ ஒர

நாளும் இல்லை இருப்பது ஒரு கோணத்திலிருந்து பார்ப்போமேயானால் ஒரு கிரகம் சுபக்கிரகமாய்க் காணப்படும். இன்னொரு கோணத்திலிருந்து பார்ப்போமானால் அதுவே அசுபக் கிரகமாகக் காணப்படும்.

எனவே சுபத்தன்மை.அசுபத் தன்மை ஆகிய இவ்விரண்டுமே ஒவ்வொரு கிரகத்துக்கும் உண்டு. ஒவ்வொரு கிரக அமைப்புக்கும் உண்டு. ஒவ்வொரு தசாபுத்திக்கும் உண்டு கோசர நிலைக்கும் உண்ட

பகலும் இரவும் கலந்ததே ஒருன்நாள். அதுபோல, சுபமும் அசுபமும் கலந்ததே வாழ்க்கை. அந்த சுபத்தையும் அசுபத்தையும் கொடுப்பவைகளே நவக்கிரங்கள

உப்பின் குணமும் புளியின் குணமும் மிளகாயின் காரமும் இம்மூன்றும் சேர்ந்தால்தன் குழம்பு)

உப்பின் குணமும் கரிக்கும் என்று சொல்லிவிட முடியாது}

புளியின் குணமும் புளிக்கும் என்று சொல்லிவிட முடியாது}

மிளகாய் குணமும் காரமாய்றுக்கும் என்று சொல்லிவிட முடியாது}

உப்பு.புளி.மிளகாய் இம்மூன்றும் சேர்ந்தாலும் குழம்பு உப்பாகவும் கரிக்காது, புளியாகவும் புளிக்காது. காரமாகவும் இருக்காது. மூன்றும் கலந்த தனிச் சுவையாக இருக்கும் அதேபோல வாழ்வில் நமக்குக் சுப பலன்களும் அசுப பலன்களும் கலந்து நடக்கும்போது. தனிப்பட்ட அந்த சுப பலனிலோ அசுப பலனிலோ அது இயலாத ஒரு புதுமையான சுவை அப்போது உதயமாகிறத

மாதா பிதா குரு குலதெவம் துணைகொண்டு சுவையாக வாழ்க்கையை வாழ்ந்த

துன்பங்களை போக்குவோமாக் சுபம


குழந்தைக்கு பல் முளைக்கும் மாதத்திற்கு தரும் பலன்கள் 

குழந்தை பிறக்கும்பொழுது பல்முளைத்தே பிறந்தால் பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் ஆகாத காலமாகும். முதலில் மேற்பல் முளைத்தால் தந்தைக்கு ஆகாத கஷ்டங்களை தரும் காலமாகும். தந்தை பல கஷ்டங்களை அனுபவிப்பார்,

1)குழந்தை பிறந்த முதல் மாதத்தில் பல் முளைத்தால் குழந்தைக்கு உடல் நலம் பாதிக்கும்,

2)குழந்தை பிறந்த 2-வது மாதத்தில் பல் முளைத்தால் சகோதரனுக்கு ஆகாது,

3)குழந்தை பிறந்த 3-வது மாதத்தில் பல் முளைத்தால் சகோதரிக்கு ஆகாது.

4)குழந்தை பிறந்த 4-வது மாதத்தில் பல் முளைத்தால் -தாய்க்கு ஆகாது

5)குழந்தை பிறந்த 5-வது மாதத்தில் பல் முளைத்தால்-சகோதர சகோதரிகு
ஆகாது/

6)குழந்தை பிறந்த 6-வது மாதத்தில் பல் முளைத்தால்-குடும்பத்தில் மகிழ்ச்சியைத்தரும்/

7)குழந்தை பிறந்த 7-வது மாதத்தில் பல் முளைத்தால்-நன்மை தரும் பெற்றோருக்கு/

8)குழந்தை பிறந்த 8-வது மாதத்தில் பல் முளைத்தால்-உடல்நலம், பெறும் குழந்தைக்கு/

9)குழந்தை பிறந்த 9-வது மாதத்தில் பல் முளைத்தால்-சேரும் குடும்பத்தி செல்வம்,


10)குழந்தை பிறந்த 10-வது மாதத்தில் பல் முளைத்தால்-வாழ்க்கை அமையும் மகிழ்ச்சியானதாக.

பிராயாணம் செய்யும்பொழுது எதிர்ப்படும் நற்சகுனம் அதாவது பிராயாணம்
நன்மை தரும் சகுனங்கள் (GOOD OMEN)

பூணூல் அணிந்த ஒற்றையர்,குதிரை,யானை,பழம்,
பசு,மலர்,துவைத்த ஆடை,விலைமாது,இசைக் கருவிகள்,மயில்,மாமிசம்,நல்ல சொற்கள் மது, சொல்லப்படுவது,கரும்பு,பெண்,குழந்தையுடன் வருவது,நெருப்பு எரிவது,வண்ணான் துவைத்த உடையுடன் வருவது,மீன்,பிணம்,ஆயுதம், கொடி,வேதபாராயணம் செய்பவர்கள்,வேத ஒலிகள்,திருமண மாப்பிள்ளை,பெண்-இவைகள் நன்மை தரும் சகுனங்களாகும் வெறும்குடம் பின்னால் வருவது நன்மையான சகுனமாகும்/

(இக்காம் பிரயாணத்தை தவிர்க்க வேண்டும்)

(BAD OMEN) பிரயாணம் செய்யும் காலம் எதிர்படும் துர் சகுனம்? 

பிராணிகளின் தோல்எலும்பு,பாம்பு,விறகு, மண்ணெண்ணெய்,அடுப்புக்கறி,மலடி,பைத்தியம்,
மலடி,பைத்தியம்,மருந்து,சன்யாசி,தலைமுடி விரித்துக் கொண்டு வருபவர்புல்கட்டு, உடல்நலமற்றவர்புல்கட்டு,உடல்நலமற்றவர் உடை ஏதுமின்றி வருபவர்,வீட்டுக்கு விலக்கா பெண்கள்
(மென்ஸெஸ் ஆன பெண்கள்),பூனைகள் சண்டை போடுவது புதிய துணி மூட்டையுடன் வியாபாரி
களிமண்,அமங்கலி,கூன முதுகுடையவர்,கருப்பு,
நவதானியம் வருவது,பஞ்சு,கழுதையின் குரல், கர்ப்பிணிப்பெண்,ஈர,உடையுடன் வருவர்,கெட்ட
வார்த்தைகளைக் கேட்பது,குருடர்,காது கேளாதோர் எதிர்ப்படுதல் பிரயாணத்திற்கு ஆகாத சகுனங்கள்

நற் சகுணம் பிரயாணம் செய்யும் காலத்தில் இடது வலது பக்கம் காணும்,வரும் நிலையில் ஏற்படும் 

பெண் மயில்,பெண் பன்றி,பறவை,எலி,இவைகள் இடம் பக்கம் வருவது நற் சகுனமாகும்/ 

பெண் மான்,பறவைகள்,குரங்கு,காகம்,கரடி,நாய் இவைகள் வலது நற் சகுனமாகும்/ 

முதல் தரம் கெட்ட சகுனம் எதிர்ப்பட்டால் திரும்பவும் வந்து நான்கு நிமிடம் வீட்டில் இருந்து பின் புறப்பட வேண்டும்,இரண்டாவது தரமும்
வந்தால் 16 நிமிடம் வீட்டில் தங்கி மீண்டும் புறப்படலாம்,மூன்றாவது தரமும் எதிர்ப்பட்டால் தவிர்க்க வேண்டும் பிரயாணத்தை/

பிரயாணம்
1) வளர்பிறையில் நீண்ட தூரப் பயணத்தை துவங்க வேண்டும் தேய்பிறையில் தவிர்க்க வேண்டும் அக்காலம் சந்திரன் பலமாக இருக்க வேண்டும்/

2)ரிஷபம்,கடகம்,சிம்மம்,துலாம்,தனுசு,இந்த லக்கனமாக பிரயாணம் செய்யு காலத்தில்
அமைவது பிரயாணத்தால் நன்மை தரும்/

3)சில கூடாத நட்சத்திரங்களில் பிரயாணம் செய்வதால் ஏற்படும் பலன்கள்

திருவாதிரை நட்ச்த்திரத்தில் பிரயாணம் செய்தால் இடையூறுகள் ஏற்படும்

ஆயில்ய நட்சத்திரத்தில் பிரயாணம் செய்தால் சரியாக உணவு,தண்ணீர் கிடைக்காது பூராடம் நட்சத்திரத்தில் பிரயாணம் செய்தால் சிறுசிறு காயங்கள் ஏற்படும் சுவாதி,விசாகம்,நட்சத்திரத்தில் பிரயாணம் செய்தால் காயங்கள் உண்டாகும் பரணி,மகம்,நட்சத்திரத்தில் பிரயாணம் செய்தால் தொல்லைகள் ஏற்படும் கார்த்திகை நட்சத்திரத்தில் பயணம் வெற்றி தராது 
பூராட்டாதி நட்சத்திரத்திநன்மை ஏற்படாது பிரயாணம் செய்தால் தொல்லைகள்உண்டாகும் பூரம்,நட்சத்திரத்தில் பிரயாணம் செய்தால்
நன்மை ஏற்படாது மழை பெய்யும் காலத்திலும்,தூறல் விழும் காலத்திலும்
பிரயாணத்தைத் தவிர்க்கவேண்டும்
(திதிகளால் பெரும் பலம்?)
பிரதமை திதியில் பிரயாணம் செய்தால்-தொல்லைகள் உண்டாகும்

துவிதிகை திதியில் பிரயாணம் செய்தால்-எண்ணம் நிறைவேறும்

திருதிகை திதியில் பிரயாணம் செய்தால்-செல்வம் சேரும்

சதுர்த்தி திதியில் பிரயாணம் செய்தால்-துன்பம் வந்து சேரும்

பஞ்சமி திதியில் பிரயாணம் செய்தால் -இடையூறுகள் மறைந்துவிடும்

சஷ்டி திதியில் பிரயணம் செய்தால்-எதையும் சாதிக்க இயலாது

சப்தமி திதியில் பிரயாணம் செய்தால்-வெற்றி பெறுவார்கள்

அஷ்டமி திதியில் பிரயாணம் செய்தால்-உடல் நிலை பாதிக்கப்படும்

நவமி திதியில் பிரயாணம் செய்தால்-சிறுசிறு விபத்துக்கள் ஏற்படும்

தசமி திதியில் பிரயாணம் செய்தால்-எண்ணங்கள் நிறைவேறும்

ஏகாதசி திதியில் பிரயாணம் செய்தால்-பிரயாணத்தால் எவ்விதக் கோளாறும் ஏற்படாது/

துவாதசி திதியில் பிரயாணம் செய்தால்-நிமித்தம் வியாபாரம் செல்வதால் நஷ்டமேற்படும்/

திரியோதசி திதியில் பிரயாணம் செய்தால்-சூழ்நிலை மகிழ்ச்சியாக ஏற்படும்,

சதுர்த்தி திதியில் பிரயாணம் செய்தால்-நோய்கள் உருவாகும், கண்நோய் ஏற்படும் எவ்வித பயணும் பிரயாணத்தால் ஏற்படாது/

அமாவசை,பௌர்ணமி, திதியில் பிரயாணம் செய்தால்-பிரயாணத்தால் மன நிம்மதி இருக்காது/

(7) கிழமைகளில் பிரயாணம் செய்வதால் ஏற்படும் பலன்கள்?

(க)ஞாயிற்றுக்கிழமையில் பிரயாணம் செய்தால் எவ்விதப் பயனும் கிடைக்காது/

(௨)திங்கட்கிழமையில் பிரயாணம் செய்தால் தோல்வி ஏற்படும்
(௩)செவ்வாய்க்கிழமையில் பிரயாணம் செய்தால் உடல்நலம் பாதிக்கப்படும்

(௪)புதன்கிழமையில் பிரயாணம் செய்தால் நன்மை தரும் பிரயாணத்தால் ஆனால் பொருட்கள் திருட்டு போகும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்

(௫)வியாழக்கிழமையில் பிரயாணம் செய்தால் பலவழிகளில் நன்மை உண்டாகும்/

(௬)வெள்ளிக்கிழமையில் பிரயாணம் செய்தால் செல்வம்சேரும் பயணம் வெற்றி தரும்/

(௭) சனிக்கிழமையில் பிரயாணம் செய்தால் செல்வ இழப்பு ஏற்படும்

அன்று அமையும் லக்கணத்தால் பெரும் பலன்கள்

1-மேஷமானால்-நன்மை தரும்,சில பிரச்சினைகளும் ஏற்படும் கவனமாக
இருந்தால் எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது/

2-ரிஷபமானால்-பிரயாணம் செய்யும் நோக்கம் பூர்ணமாக நிறைவேறும்

3-மிதுனம் - வெற்றி பெற இயலாது

4-கடகம் - நிலம் சம்பந்தமாக இடம் வீடு சம்பந்தமாக பிரயாணம் செய்வதால் வெற்றி பெறலாம்/

5-சிம்மம்-வசதியாக அமையும்

6-கன்னி -பொருட்கள் இழப்பு ஏற்படும்

7-துலாம்-எண்ணங்கள் நிறைவேறும்

8-விருச்சிகம்-சிறுசிறு காயங்கள் ஏற்படும்

9-தனுசு-வழக்கு சம்பந்தமான பிரயாணம் அதில் வெற்றி பெறலாம் நீதிமன்றங்களுக்கு செல்ல ஏற்ற லக்கனமாகும்

10-மகரம்-எதிலும் வெற்றி தராது

11-கும்பம்-வழியில் பல தொல்லைகள் ஏற்படும் செல்லும் வாகனம் பழுதாகி வேறு வாகனத்தில் செல்ல நேரிடலாம்

12-மீனம்-பிரயாணம் செய்யும் காலம் பொருட்கள் திருட்டுப் போகும் கவனமாக இருக்க வேண்டும்
வியாதிகள்

1,அஸ்வினியில் தோன்றினால்-9 நாட்கள் வரை வியாதிஇருக்கும்

2,பரணியில் தோன்றினால் -5 நாட்களில் குணமாகும்

3,கார்த்திகையில் தோன்றினால்-7 நாட்களில் குணமாகும்

4,ரோகிணியில் தோன்றினால் -2 நாட்களில் குணமாகும்

5,மிருகசீர்ஷத்தில் தோன்றினால்-9 நாட்களில் குணமாகும்

6,திருவாதிரையில் தோன்றினால்-5-லிருந்து 45 நாட்களில் குணமாகும்

7,புனர்பூசத்தில் தோன்றினால்-7 நாட்களில் குணமாகும்

8,பூசத்தில் தோன்றினால் -7 நாட்களில் குணமாகும்

9,ஆயில்யத்தில் தோன்றினால்-நீண்ட நாட்களுக்கு வியாதியும் இருக்கும்

10,மகத்தில் தோன்றினால்-15 நாட்களுக்குள் குணமாகும்

11,பூரத்தில் தோன்றினால்-21, நாட்களுக்குள் குணமாகும்

12,உத்திரத்தில் தோன்றினால்-9 நாட்களுக்குள் குணமாகும்

13,அஸ்த்தத்தில் தோன்றினால்-7 நாட்களுக்குள் குணமாகும்

14,சித்திரையில் தோன்றினால்-8 நாட்களுக்குள் குணமாகும்

15,சுவாதியில் தோன்றினால்-45 நாட்களுக்குள் குணமாகும்

16,விசாகத்தில் தோன்றினால்-5 நாட்களுக்குள் குணமாகும்

17,அனுஷத்தில் தோன்றினால்-10 நாட்களுக்குள் குணமாகும்

18,கேட்டையில் தோன்றினால்-12 நாட்களுக்குள் குணமாகும்

19,மூலத்தில் தோன்றினால் -10 நாட்களுக்குள் குணமாகும்

20, பூராடத்தில் தோன்றினால்- 8 நாட்களுக்குள் குணமாகும்

21,உத்திராடத்தில் தோன்றினால்-30 நாட்களுக்குள் குணமாகும்

22,திருவோணத்தில் தோன்றினால்-8 நாட்களுக்குள் குணமாகும்

23,அவிட்டத்தில் தோன்றினால்- 10 நாட்களுக்குள் குணமாகும்

24,சதயத்தில் தோன்றினால் -6 நாட்களுக்குள் குணமாகும்

25,பூரட்டாதியில் தோன்றினால்-12நாட்களுக்குள் குணமாகும்

26,உத்திரட்டாதியில் தோன்றினால் -15 நாட்களுக்குள் குணமாகும்

27,ரேவதியில் தோன்றினால் -8 நாட்களுக்குள் குணமாகும்

 

{அசுபமான கனவும் அதன் பலன்களும்}
கனவில் ஒரு நாயோ அல்லது குள்ள நரியோ,கழுகோ, பிசாசோ அல்லது கறுப்பு
பூச்சியோ, புழுவோ இவற்றைக் கண்டால் அது அபரிமிதமான துக்கத்தைக் கொடுக்கும்.
கனவில் ஒரு காகம்,கழுகு பருந்து,பிசாசு அல்லது இராட்சசன் ஆல மரத்தில் ஏறுவது போல் கண்டாலோ,அதிலிருந்து விழுவது போல் கண்டாலோ அது அபரிமிதமான துக்கத்தைக் கொடுக்கும்
கனவில் கறுப்பு நிறமுள்ள கொடிய பூச்சிகளையோ,கறுப்பு பசுவையோ மரம் ஏறுவதை போலக் கண்டாலும்,இவற்றுடன் தொடர்பு இருப்பது போல் கண்டாலும்
அதிகமான மன உலைச்சல் ஏற்படும்
கனவில் குதிரை,ஒட்டகம்,கார் போன்ற வாகனம் எருது,நாய் அல்லது கறுப்பு பெண் இவற்றைக் கண்டால் துக்கம் ஏற்படும்.
கனவில் தேவதைகள் ஆடுவது போன்ற இடத்தையோ, அவர்களின் சிரிப்பையோ,
அழுகையையோ,ஒருவரை ஒருவர் முதுகில் அடிப்பதையோ,ஓடுவதையோ கண்டால் அந்த இடத்தில் அழிவு ஏற்படும்,
கனவில் கம்பளித்துணியையோ,வெள்ளியினால் ஆனசதுரத்தையோ, தாயக் கட்டைகளையோ, இரும்புக் குவியல்கல்,எள்ளுச்செடி பன்றி,பூனை,குரங்கு வளை
இவற்றைப் பார்த்தால் இறப்பு ஏற்படும்.
கனவில் சிவப்பு வஸ்திரம் அணிந்த ஒரு பெண்ணை தழுவுவது போல் கண்டாலும்,வாசனைத் திரவியங்களினால் அலங்கரிக்கப்பட்டு இருந்தாலும் அந்த
இரவே இறப்பு ஏற்படும்
கனவில் தெற்கு பார்த்த இடத்தில் சிவப்பு வஸ்திரம், சிவப்பு ஆடை அணிந்து சிவப்பு புஷ்பங்கள் அணிந்து இரு கைகளையும் கட்டிக் கொண்டு வந்தால் இறப்பு நிச்சயம்.
கனவில் ஒரு பெண் தலையில் உயரே தூக்கிய குச்சி போன்ற தலை மயிருடன்
கண்டால் காண்பவனுக்கோ அல்லது ஆசானுக்கோ இறப்பு ஏற்படும்.
கனவில் ஒரு சண்டாளனையோ அல்லது தவிர்க்கப்பட்டவனையோ தாழ்த்தப்பட்டவனையோ கீழ்ச்சாதியினரையோ, காகத்தையோ.கொடுமையான மிருகத்தையோ, கறுப்பு நிற நாகப்பாம்பையோ கண்டால் இறப்பு நிச்சயம்.
கனவில் உடல் முழுவதும் தேனோ,அல்லது நெய்யோ எண்ணையோ பூசி இருப்பது போல் கண்டால் வியாதிகள் தொடர்ந்து வரும்.
கனவில் ஒரு குரங்கினுடன் தொடர்போ,அல்லது பன்றியுடன் தொடர்போ,பற்கள் நீளமாக உள்ள மிருகத்துடன் தொடர்போ, கொம்புகளை ஆயுதமாக உள்ள மிருகத்துடன் தொடர்போ கண்டால் அதிகமான நாசம் ஏற்படும்.
கனவில் உடைந்தப் பன்னீர் குடத்தைக் கண்டால் துக்கம் உண்டாகும்.
கனவில் ஆகாயத்திலிருந்து நக்ஷத்திரங்கள் விழுவதைப்போலவும் சூரியனோ, சந்திரனோ வலுவிழந்து காணப்பட்டாலும் அதிகமான துக்கமோ, அல்லது ஒரு இழப்போ ஏற்படும்.
கனவில் ஒரு தண்ணீர் தொட்டியையோ அல்லது நதியையோ,சமூத்திரத்தையோ,
தண்ணீர் முற்றிலும் வற்றிப்போனது போல் கனவு கண்டால் நஷ்டம் ஏற்படும்
கனவில் ஒருவன் தனது உடலை எண்ணெயினாலோ அல்லது குங்குமத்தினாலோ பூசினதுபோல் கண்டால் அவனுக்கு தொழுநோய் ஏற்படும் அத்துடன் கூட நாயினால் உபாதையும், ஒருமாட்டினால் உபாதையும் ஏற்படும்
கனவில் பற்கள் விழுவது போல் கண்டால் அல்லது ஆடுவது போல் கண்டாலும் மனதில் கவலை உறவினர்களின் இழப்பு ஆபத்து இவை நிச்சயம்.

உடல் உறவு பற்றிய ஜாதக இரகசியங்கள்

1, காம உல்லாச மனத்துக்கு சுக்கிரனும்,உடலுக்கு அதிபதியாகிய குருவும்

அஸ்தங்கம்,அடைந்துள்ள நாள்களில் உடல் உறவு கொள்வதைத் தவிர்க்கவும் 2, இலக்கினத்திற்கு ஐந்தாமிடத்து அதிபதி அஸ்தங்கம் அடையாமல் வலுவாய் இருக்கும் காலங்களில் உடல் உறவு கொள்ள வேண்டும், 3,  வளர்பிறைச் சந்திரன் ஐந்தாமிடத்தை குரு,சுக்கிரன் ஆகிய

கிரகங்கள் பார்க்கும் நாள்களில் உடல் உறவுகொள்வது நல்லது                    

4, ஐந்தாமிடத்து 6, 8, 12, இல் அதிபதி மறைந்திருக்கும் நாள்களில் உடல் உறவு கொள்ளக்கூடாது 5, வளர்பிறைச் சந்திரன் குரு,சுக்கிரன்,ஆகிய ஓரையில் உடல் உறவு கொள்ள வேண்டும் 6, கூடாது பகலில் உடல்

7, தம்பதியர் வயிற்றில்,மலம்,சிறுநீர் ஆகியவற்றை அடக்கிக்கொண்டு உடல்  உறவுகொள்ளக்கூடாது 8, உடல் உறவு கொள்ளக்கூடாது விரதம் இருக்கும் நாள்களில் 9, மாதவிலக்கு ஆவதற்கு முன்புள்ள ஐந்து நாள்களிலும் மாதவிலக்கான முதல் ஐந்து நாள்களிலும்,உடல் உறவு கொள்ளக்கூடாது 10,தம்பத்தியர் இருவரின் உடல் உறவு கொள்ளும் போது உடல் நலமும் மனநலமும் திருத்தியாய் இருக்க வேண்டும்

கனவுகள் தரும் பலன்கள்

இரவில் காணும் கனவுகளுக்கே பலன் தரும் நிலையாகும் பகற்கனவு பலன் தராது

1,)சந்திரனை,சூரியன் பிடிப்பதாகக் கனவு கண்டால்-யோகம் தரும்

2,)பழமரங்கள்,மலைப்பிரதேசம் இவைகளில்-யோகமாகும்

3,)மரங்கள் பழங்கள் அதிகமாக இருக்க மாமரம்,புளியமரம் பாக்குமரம் தென்னைமரம் இவற்றில் காய்களும் நிறைந்திருக்க-செல்வம் சேரும்

4,)எதிலும் ஏறுவதாகக் கனவு கண்டால்-உயர்நிலை பெறுவார்கள்

5,)ஆற்றுநீரை, கடல் அலையைப் பிடிப்பதாகக் கனவு கண்டால்-செல்வம் சேரும்

6,)பெற்றோர்,நண்பர்களை,மக்களைப் பிடிப்பதாக
கனவு கண்டால்-புகழ் பெறுவார்கள்

7,)மதுகுடிப்பதாகவும்,தாசிகளுடன் உறவு கொள்வதாகவும் கனவு கண்டால்-மகிழ்ச்சியான காலமாகும்

8,)வெள்ளைப் பட்டு அணிந்த அழகான பெண்ணைக் கண்டால்-செல்வம் சேரும்

9,)அருவருப்பான மனிதர்கள்,காகம்,மீன்,இரத்தம்,
விலைமாதர் இவர்களைக் கனவில் கண்டால்-
செல்வம் சேரும்

10,)இளம் பெண்,மாலை அணிந்து வெள்ளை உடை அணிந்து,வாசனைப் பொருட்களை படுக்கையில்
அணிந்து,அமர்ந்திருந்தால்-புகழ்பெறும் காலம்

11,)இளம் பெண் தாமரை மலர் ஏந்தி வருவதைப்
பார்த்தால்-அதிர்ஷ்டம் வரும் காலம்

12,)காளைமாடு அரசன், பசு,குதிரை,பிடிப்பதாகக்
இவைகளைப் கண்டால்-மேன்மை பெறும் குடும்பம்
13,)சேவல்,தரும் ஆபத்து மிருகங்கள்,பெரிய மரம்,
பறவை தங்கநிற இவைகளைப் பிடிப்பதாகக் கண்டால்-பெறும் காலம் அதிர்ஷ்டம்

14,)அரசனுடன் இருப்பதாகவும் தேவர்களுடன் பேசுவதாகவும் கண்டால்-உயர்வடையும் நிலையைத் தரும்

15,) வீடு கட்டுவதாகவும்,மரம் நடுவதாகவும், பண்ணை அமைப்பதாகவும் கண்டால் கனவு-
புகழ்பெறுவார்கள்

16,)மலர்.தாமரை,வெள்ளைப்,பூமாலை,ஆபரணம்
இவைகளைப் பெறுவதாகக் கண்டால்-பெறும்புகழ்பெருவார்

17,)மாம்பழம்,பசு சாணம்,இவைகளைக் கண்டால்-
பெறும் காலம் அதிர்ஷ்டம்

18,)பனங்கள் குடிப்பதாகக் கண்டால் கனவு-பெறலாம் லாபம்

19,)காளையை ஓட்டிச் செல்வதாகவும் காரில் தனியாக ஓட்டிச் செல்வதாகவும் குதிரையைச்
செலுத்துவதாகவும் கண்டால்-பெறும் அதிர்ஷ்ட காலமாகும்

20,)மிருகங்களுடன் சண்டையிடுவதாகக் கண்டால்
அதிர்ஷ்டமான காலமாகும்

21,)பால் குடிப்பதாகக் கண்டால்-சேரும் செல்வம்

22,)பாம்பு கடித்து இரத்தம் வருவதாகவும் நாய்கடித்து இரத்தம் வருவதாகவும் கண்டால்-
கனவு அதிர்ஷ்டம் கூடிவரும் காலமாகும்

23,)வெள்ளைநிறப் பாம்பு கையில் கடிப்பதாகக்
கண்டால்-சேரும் செல்வம் ஒரு மாதத்திற்குள்

24,)துண்டிக்கப்பட தலை இரத்தம் கொட்டுவதாகக்
கண்டால்-சேரும் செல்வபெறுக்கு

25,)இளமைக் காலம் முதுயாவதாகக் கனவு கண்டால்-அதாவது கிழவராவதாக கண்டால் நீண்ட ஆயுள் தரும் வரும் விபத்தால் ஆபத்து நீங்கிவிடும்

26,)திருக்கோவிலை அலங்காரம் செய்வதாகக் கனவு கண்டால்-காத்திருக்கிறது நல்ல அதிர்ஷ்டம்

27,)வெள்ளை பசு,வெள்ளை ஆடை,இவைகளைக் கண்டால்-நிச்சயம் வெற்றி

28,)வீடு எரிவதாகவும் தானியம் சேமிப்பதை கண்டால்-செல்வம் சேரும்

29,)தங்கச்சிலையாக-தான் மாறுவதாகக் கண்டால்
கண்டம் விலகிவிடும் புகழ்சேரும்

30,)சாதம்,பழவகைகள், ஆறு,கடல்,தயிர்,பால்,நெய்,
மாங்கனி,சீனிவெல்லம்,பாயசம்,தண்ணீர்க்குடம், சாமரம்,இரத்தம்.சமைத்த மாமிசம்,இவைகளைக் கையில் பிடித்தாலும் சுவைத்தாலும் வேதம் ஓதுவதைக் கேட்டாலும்-செல்வம் சேரும்

31,)தெய்வம்,குரு,சாது,இஷ்ட தெய்வம்,நல்வார்தை இவர்களுடன் பேசுவதாகவும்,பாம்பு, கடிப்பதாகவும்
பூச்சிகடிப்பதாகவும்,பெண்களுடன் பேசுவதாகவும்
கனவு கண்டால்-விளையும் நன்மை விரைவில்

32,)பணம்,சாதம்,வெற்றிலை,பாக்கு,தானியம், இவைகளைப் பெறுவதாகவும்,சாதத்தை உண்பதாகவும்,தான் பால் அபிஷேகம்,செய்யப்படு
வதாகவும் கனவு கண்டால்-விரைவில் லாபம்
பெறுவார்கள்

33,)பிணைக்கைதியாக ஆக்கப்படுவதாகக் தான் கட்டுப்படுவதாக, கண்டால்-தேறிவரும் உடல்நல
ம்

{அங்கதுடிப்புகளும் அங்களும் பலம்களும்}

அங்கத் துடிப்புக்கள் உடம்பில் எப்போதும் நிகழ்வதில்லை: எப்போழுதாவது ஒவ்வொரு முறைதான் ஒவ்வொர் உறுப்பில் நிகழும்.அவ்வாறு நிகழும் துடிப்புக்களை கொண்டு அவரவரும் தத்தம் குணநலன்களையும்.வாழ்க்கையின் நேரும் நிகழ்ச்சிகளையும்,அதிர்ஷ்டங்களையும் அறிந்து கொள்ளலாம்
ஒருவருடைய தலையில் உச்சிப்பகுதி துடித்தால் அது நல்ல் பலனைக் குறிப்பதாகும்,நீங்காமல் இருந்து வந்த துன்பமெல்லாம் நீங்கும் இன்பம் பிறக்கும்
உச்சந்தலையின் வலது பாகத்தில் துடிப்பு உண்டானால், யாதேனும் ஒரு காரணத்தால் அச்சம் உண்டாகும்,
உச்சந்தலையில் துடித்தால்-துன்பம் நீங்கும்,2)-உச்சந்தலை இடதுபாகம்-பெருமை உண்டு,3)-தலை-பெருமை,புகழ்,செல்வம் 4)-நெற்றியின் இடதுபாகம்-நிறைந்தசெல்வ
5)-நெற்றியின் வலது பாகம்-நோய்நீங்கும்(6)-வலது புருவம்-பெருமை 7)-இரண்டு புருவங்களும் பெருமை(8)-கண்ணின் பின்பாகம்-பெரும்புகழ்,செல்வம்(9)-இடது கண்ணின் இமை-செல்வம் சுகவாழ்க்கை(10)-இடது கண்-மிகுந்த பெருஞ்செல்வம்..{11}-கழுத்து-துன்பங்கள் அறவே நீங்கும்(12)-பிடரியின் இடதுபுறம்-சிறப்பு13)-இடது புயப்புறம்-நல்ல மனைவி 14)வலது புயப்புறம்-வழக்கில் வெற்றி 15)-வலது கண்டக்கை-உடைச் சிறப்பு 16)இடது கண்டக்கை-தோஷம் நீங்கும், 17) வலது ழுழங்கை-தவப்பயன் 18)-இடது ழுழங்கை-தனச் சேர்க்கை-19)-வலது முன்கை- பெருக்கமுள பேறு 20)-இடது உள்ளங்கை-இலாபம்(21)-வலது கை பெருவிரல்-இலாபம் 22)-வலது கை ஆள்காட்டி விரல்-நன்மைசெல்வம் 23)-வலது கை நடுவிரல்-நல்ல காரியம் 24)-வலது கை மோதிரவிரல்-பெருமை 25)-வலது கை அடிபாகம்-சிறந்த காரியத்தால் செல்வம் 26)-இடது கை பெருவிரல்-நிறைவான வாழ்க்கை(27)-இடது கை பெருவிரல்-இராஜநோக்கம்(28)-இடது கை மோதிரவிரல்-நன்மை,தனம் 29)-இடது கை சிறுவிரல்-மரணமில்லை 30)-இடது முலை-சுக வாழ்க்கை(31)-வலது கைப்பட்டை-புதிய ஆடை (32)-மூக்கின் வலது பாகம்-நற்பாக்கியம்,செல்வம்(33)-மூக்கின் இடது பாகம்-செல்வம்,34)-மேல் உதடு-நல்ல செய்தி 35)-கீழ் உதடு-புதிய தின்பண்டம் 36)-இடது விலாவின் வலது பாகம்-பொருள் சேரும் பயணம் 36)-இடது விலாவின் இருபாகங்கள்_நோய்தீரும் இன்பம் உண்டு துன்பம் நீங்கும் வினை தீரும் 37)-இடை வேள்வி புரிதல் மிகப்பேறு,
38)-வலது விதை-யானை குதிரை ஏற்றம் 39)-இடது விதை-நோய்நீங்கும் 40)-இடது தொடை-நல்ல செய்தி 41)-இரு தொடைகள்-செம்பொன் உண்டாகும் 42)-இடது ழுழந்தாள்-உலகை ஆளுதல் 43)-வலது கணைக்கால்-செல்வம் உண்டாகும் 44)-இடது புறவடி-வழக்கில் வெற்றி 45)-இடது உள்ளங்கால்-தேசப் பயணம் 46)- இரண்டு உள்ளங்கால்கள்-பல்லக்கில் ஏறுதல் 47)-கால்விரல்கள் பத்து-நன்மைகள்
திருமகள் சேர்க்கை சிறப்புமிக்க வாழ்க்கை 

{பயக்கும் தீமை துடிப்புகள்}

1)-உச்சந்தலையின் வலது பாகம்-அச்சம் 2)-தலையின் பின்பாகம்-பகை 3)-இடது புருவம்-பெரிய பொல்லாங்குப் பேச்சு 4)-வலது கண் இமை மேல் நோக்கி-வழக்கு வந்தே தீரும் 5)-வலதுகண் இமை நோக்கி-கவலை அழுகை6)-இடது கண் இமை நோக்கி-துணைவனுக்குத் துன்பம்(7)-வலது கண் ழுழுவதும்-வருத்தம் நோய் 8)-வலது புயப்புறம்-துன்பம் தரும் செய்தி(9)-இடது புயம்-உறவினர் இறப்பு
10)-இடது முன்கை-பிறரால் துன்பம் 11)-வலது உள்ளங்கை-இழிவு வரும் 12)-வலது புறங்கை-வழக்கு உண்டாகும் 13)-இடது புறங்கை-துன்பம் வ்ரும் 14)-வலது கை சிறுவிரல்-உற்றார் இறப்பு 15)- இடது கை நடுவிரல்-வழக்கு உண்டாகும் 16)-இடது கை-கவலை,இருந்த பதவியை இழத்தல் 17)-நெஞ்சு-துன்பம் வரும்18)-வலது முலை-இறப்பு19)-தொப்புள்-மிகுந்த கவலை20)-வயிறு-நாள் தோறும் நோய் 21)-வலதுபுற முதுகு-நோய் வந்து நீங்கும் 22)-இடது புறமுதுகு-குடியிருந்த மனையை இழத்தல் நெடுந்தொலைவு செல்லுதல்23)-முதுகு ழுழுவதும்-வருத்தம் தணியாநோய் 24)-இரண்டு கைப்பட்டைகள்-குற்றமுடையது
25)-வலது விலா-வருத்தம் கவலை 26)-இடது விலா-வீட்டை இழத்தல் 27)-ஆண்குறி-தொலைவில் உள்ளவரால் கவலை 28)-இரண்டு விதைகள்-வழக்கு உண்டாகும் 29)-வலது தொடை-முறையற்ற வகையில் வழக்கு,வெற்றி 30)-வலது ழுழந்தாள்-கோபம் 31)-வலது கண்டைக்கால்-அடிமை 32)-இடது கண்டைக்கால்-பெருநோய்,கவலை 33)-இடது கணைக்கால்-இறப்புச் செய்தி 34)-இரண்டு கணைக்கால்கள்-நடுக்கம் ஓட்டம்35)-வலது புறவடி-நோய்,37)-வலது உள்ளங்கால்-நோய் சுபம் சுபம் சுபம்

\i/

|| Saanthi, Saanthi, Saanthi: ||

This website is constructed and Managed by TRS Iyengar